வாப்புச்சி மரைக்கார்.
கி.பி.1016ல் அரப் நாட்டில் இருந்து (இற்றைக்கு சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு) இலங்கைக்கு வருகை தந்த பெருமக்களில் அஷ்ஷெய்கு ஃபரீத் என்பவர் சிறந்த மருத்துவராகும். இவரின் பரம்பரையில் உள்ளவர்களே வாப்புச்சி மரைக்கார், சேர் ராஸிக் பரீத் போன்றவர்கள். சேர் ராஸிக் பரீத் அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் தலைவராக இருந்துள்ளார். கொழும்பு அரும்பொருள் காட்சி சாலை, தலைமைத் தபால் நிலையம், நகர மண்டபம் போன்றவைகளை வாப்பிச்சி மரைக்கார் கட்டிக்கொடுத்திருக்கிறார். (இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 4-473)
இலங்கையின் முதல் அரபுக் கல்லூரி.
இலங்கையில் முதல் அரபுக் கல்லூரி 1870ஆம் வருடம் காலி மாநகரில் மக்கிய்யா என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்தாபகர்களாக அஹ்மத் ஸாலிஹ் அல் யமானியும் அபூ பக்கர் மிஸ்கீன் அல் காஹிரி ஆகிய இருவரும் விளங்குகிறார்கள்.
தொடர்ந்து 1884ல் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இதன் ஸ்தாபகர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களாகும்.
தொடர்ந்து 1884ல் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதிகளில் தரீக்காக்கள் அல்லாத வேறு எந்த தஃவா அமைப்புக்களும் இலங்கையில் செயற்படவில்லையென்பதை இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்துகிறது.
இதன் அடிப்படையில் கி.பி1844 புத்தளத்தில் காஸிமிய்யா அரபிக் கல்லூரி ஐதுரூஸிய்யா தரீக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கட்டுள்ளது. 1892ல் காலியில் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா ஷாதுலிய்யா தரீக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதே வருடம் கிண்ணியாவில் சஃதிய்யா அரபிக் கல்லூரி ஆரம்பிக்கட்டிருக்கிறது.
கி.பி1912ல் மாத்தறையில் மின்ஹத்துல் ஃபாஸிய்யா அரபிக் கல்லூரியும் 1918 தர்கா நகரில் முஅய்யிதுல் இஸ்லாம் என்ற பெயரிலும் 1922ல் வெலிகம மாத்தறையில் கிழ்ரிய்யா அரபிக் கல்லூரி 1935ல் மஹறகமையில் கபூரிய்யா அரபிக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது அலவிய்யதுல் காதிரிய்யா தரீக்கத்தின் முக்கியஸ்தர் அல்ஹாஜ் என்.டி.எச். அப்துல் கபூர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இவர் கொழும்பு மருதானை ஜும்ஆ பெரிய பள்ளிவாயிலின் பரிபாலன சபைத் தலைவராகவும் கடமையாற்றிருக்கின்றார். இப்பள்ளிவாயலின் முற்றத்தில் காணப்படுகின்ற மண்ணறை இவரது மண்ணறையாகும்.
இலங்கைத் திருநாட்டில் பதிவு செய்யப்பட்ட அரபு மத்ரசாக்களில் மேற்குறிப்பிட்ட அரபு மத்ரசாக்களைத் தவிரவுள்ள அனைத்து அரபு மத்ரசாக்களும் 1940க்குப் பிறகுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தொடரும்....





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக