வியாழன், 10 ஜனவரி, 2019

மீசான் கட்டையின் மூலமாக அருள் பெறுதல்


ஏறாவூர் மக்களால் “சேமன் அவ்லியா” என மதிக்கப்படும் யூ.வி. மீராலெப்பை என்பவர் 30-10-1907ல் பிறந்து 24-09-1954ல் காலமானார். பல்லாக்கு வலிய்யூல்லாஹ் எனப்படும் இறை நேசரிடம் விஷக் கடிக்கு வைத்தியம் செய்வதற்காக இவர் வாக்குப் பெற்றிருக்கிறார்.

விஷ வைத்தியத் துறையில் பிரபல்யம் பெற்றிருந்த இவர் மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்ட கபுரடியின் இரு பக்கங்களிலும் நட்டப்பட்டுள்ள மீசான் மரக்கட்டைகளுள் ஒன்று விஷத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையதாக இருப்பதால் விஷக்கடிக்குட்பட்ட பல்லின மக்களும் விஷத்தை இறக்கி அருள் பெறுவதற்காக இவரின் கபுரடிக்கு இன்றும் மக்கள் இரவு பகலாக வந்து செல்கின்றனர். இவரது கபுரடி மண்ணை அருளை நாடி எடுத்துச் செல்லும் வழமையும் உள்ளது.

1990 ஆம் ஆண்டளவில் ஏறாவூர் நகரம் தமிழீழ பயங்கரவாத கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளான சமயத்தில் அவர்களால் வீசி எறியப்பட்ட குண்டுகள் ஊருக்குல் விழுந்து பாதிப்பை ஏற்பட்டுத்தாத விதத்தில் பச்சை நிற ஆடை அணிந்த ஒருவர் அக்குண்டுகளைப் பிடித்துப் பிடித்து தம் சட்டைப் பைக்குள் போட்டதைக் கண்ணுற்றதாக அக்காலப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுமத பொலிஸ் தரப்பினர் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு பச்சை நிற ஆடை அணிந்த அப்பெரியார் மீராலெப்பை அவ்லியாதான் என்று அவ்வூர் மக்கள் இன்றும் கூறுவதைக் காணலாம்.

விஷக் கல்லின் மூலமாக அருள் பெறுதல்

இது தவிர ஏறாவூர் ஷுபி மன்ஸிலில் சங்கைக்குரிய அஷ்ஷெய்கு ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்களினால் ஓதி நடப்பட்டுள்ள ஒரு கல் உள்ளது. விஷம் தீண்டப்பட்டவர்கள் இக்கல்லில் வைத்து விஷமிறக்குவதற்காக வருகின்றனர். எனினும் மீராலெப்பை அவ்லியாவுடைய கபுரடியில் உள்ள கட்டையைப் போன்று இது பிரபல்யம் பெறவில்லை.

கௌரவ பூக்கோயாத் தங்கள் அவர்களினால் ஓதி நடப்பட்ட விஷக் கல்லைப் போன்று பல விஷக் கற்கள் மதிப்புக்குரிய அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீத் தங்கள் அவர்களினால் நாட்டின் பல பாகங்களில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...