ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு. கட்டம் 04

 கட்டம் 04



முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம், முதல் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ,உலகை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் பிரசாரம் செய்த அதே ஓறிறைக் கொள்கையினையே அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் பிரசாரம் செய்தார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேரில் கண்டு விசுவாசித்தவர்களான ஸஹாபாக்கள் அண்டை நாடுகளுக்கு மார்க்கப் பிரசாரத் தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அந்த வகையில் நம் தாய் நாடான இலங்கையும் அருமையான ஸஹாபாப் பெருமக்களின் சிறப்பான பாதங்கள் படும் பாக்கியம் பெற்றிருக்கிறது. அவ்வாறே அந்த அருமைத் தோழர்களைக் கண்ட தாபிஊன்கள்,தபஉத் தாபிஈன்கள் இந்நாட்டில் வாழ்ந்து இறையடி சேர்ந்து நல்லடக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்கள். 


ஹிஜ்ரி 135ம் வருடத்தில் அதாவது இற்றைக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மாகாணத்தின் ஹெம்மாதகமவெனும் ஊரில் கண்டு பிடிக்கப்பட்ட சமாதியில் எழுதப்பட்டிருந்த அரப் எழுத்து இதற்கான ஆதாரமாக இருக்கின்றது. ஹிஜ்ரி 3-3-133 என்ற இலக்கங்கள் பொறிக்கப்பட்ட சமாதியொன்றும் மன்னார் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தமக்கு மார்க்க சட்டதிட்டங்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு போதகரை அனுப்பி வைக்குமாறு அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதை வேண்டிக்கொண்டபோது அவர் காலித் இப்னு பகாயாவை ஹிஜ்ரி 300களில் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர் தான் அனுப்பி வைக்கப்பட்ட நோக்கத்தினை சிறப்பாக நிறைவேற்றிய பின் ஹிஜ்ரி 317இல் வபாத்தாகி கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவரது மண்ணறையில் பதிப்பதற்காக கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களால் அனுப்பப்பட்ட நடுகல் நம்நாட்டு அரும்பொருட்காட்சிச்சாலையில் உள்ளது. இது போன்ற இன்னும் பல நடுகற்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இலங்கையில் இஸ்லாம் பரவியதை அறிவிக்கும் சாதனங்களாகவுள்ளன. 

2012-09-15ல் இங்கை முஸ்லிம் சமயஇ பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட “அல்ஆலிம் முதவஸ்ஸிதா மற்றும் அல்ஆலிம் ஸானவிய்யா பரீட்சைகளுக்கான பிரமானங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும்” என்ற நூலின் 35ம் பக்கத்தில் இவ்விடயம் பதிவாகியுள்ளது. 

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கடிதத்தினை எடுத்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்த நபித் தோழர் ஹழ்ரத் வஹ்ப் இப்னு ஹப்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் இலங்கையில் பல வருடங்கள் தம்மார்க்கத்தினைப் பரப்பியதாகவும் இறையில்லங்களை கட்டிக்கொண்டதாகவும் வரலாறு பதிவாகியுள்ளது. பார்க்க: இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் - எம்.ஐ.எம்.அமீன்.
 தொடரும்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...