عن أم المومنين عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان إذا اشتكى الإنسان الشيء منه أو كانت به قرحة أو جرح قال النبي صلى الله عليه وآله وسلم بإصبعه هكذا ووضع سبابته بالأرض ثم رفعها باسم الله تربة أرضنا بريقة بعضنا ليشفى بها سقيمنا بإذن ربنا. متفق عليه
“யாராவது ஒருவர் தனக்கு பரு அல்லது காயம் அல்லது வருத்தம் இருப்பதாக முறையிட்டால் தனது சுட்டு விரலினால் மண்ணைத் தொட்டு இந்த மண்ணின் அருளினால் அல்லாஹ் சுத்தை வழங்குவான் என்று சொல்வார்கள்.”
புகாரி, முஸ்லிம்
غبار المدينة شفاء
“மதீனத்துப் புழுதி நோய் நிவாரணியாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
நபிமார் மற்றும் நல்லடியார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பூமியில் அடக்கம் செய்யப்படுவது மூலமாக அருள் பெறுதல்
عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم أخبر عن موسى عليه السلام حين جاءه ملك الموت أنه سأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر. البخاري ومسلم.
“நபிய்யுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மலகுல் மௌத் வந்தபோது பைத்துல் முகத்தஸ் அருகில் அவரைக் கொண்டு செல்லுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்ததாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.”
புகாரி, முஸ்லிம்
واجعل موتى فى بلد رسولك صلى الله عليه وآله وسلم. البخاري
“ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ஊரில் எனது மரணத்தை ஏற்படுத்து என்று ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு துஆ செய்துள்ளார்கள்.”
புகாரி
قال النبي صلى الله عليه وآله وسلم من أكل سبع تمرات مما بين ربتيها حين يصبح لم يضره سم حتى يمسى. مسلم
“மதீனத்து ஈச்சம் பழத்தில் ஏழு பழங்களை யாரொருவர் காலையில் சாப்பிடுகிறாரோ அவருக்கு மாலை வரை விசம் ஏறாது என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.”
முஸ்லிம்
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதங்களை நபித் தோழர்கள் பலர் முத்தமிட்டுள்ளார்கள். அந்த வகையில் உமர் ரழியல்லாஹு அன்ஹு முத்தமிட்டிருக்கிறார்கள். அவ்வாறே தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு முத்தமிட்டுள்ளார்கள்.
ஸெய்யிதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதங்களை முத்தமிட்டிருக்கிறார்.
இமாம் முஸ்லிம் அவர்கள் இமாம் புகாரி அவர்களை சந்திக்கச் செல்லும் சந்தர்ப்பத்திலெல்லாம் உங்கள் இரு பாதங்களையும் முத்திடுவதற்கு தாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபித் தோழர்அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதத்தினை முத்தமிட எத்தனித்தபோது அவர் தடுத்துவிட்டார்.
பார்க்க: அத்தபர்ருக் பிஸ்ஸாலிஹீன வஆதாரிஹிம் பக்கம் 91-93
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருச் சபையில் அமர்வதன் மூலமாக அருள் பெறுதல்
عن أنس رضي الله تعالى عنه قال كان أخوان على عهد رسول الله صلى الله عليه وآله وسلم فكان أحدهما يأتي النبي صلى الله عليه وآله وسلم والآخر يحترف فشكا المحترف أخاه إلى النبي صلى الله عليه وآله وسلم فقال لعلك ترزق به. الترمذي
“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவdகள் காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். அதில் ஒருவர் தொழிலுக்குச் செல்பவராகவும் மற்றவர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் அமர்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். தொழிலுக்குச் செல்பவர் தனது மற்ற சகோதரர் பற்றி முறைப்பாடு செய்தபோது அவரின் அருளினால்தான் உங்களுக்கு உணவளிக்கப்படுகிறதென்று உரைத்தார்கள்.”
திர்மிதி
நபித் தோழர் ஷத்தாத் பின் அவ்ஸ் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்த ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பாதணியின் இரட்டை சோடிகளையும் தன்னுடைய மகன் முஹம்மத் என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் அதில் ஒன்றை அவரது சகோதரி தனது பிள்ளைகள் அதன் வாயிலாக அருள் பெறவேண்டும் என்று கூறி எடுத்துச் சென்ற செய்தியினை ஹாபிழ் தஹபி குறிப்பிடுகிறார்.
عن صالح بن درهم يقول انطلقنا حاجين فإذا رجل فقال لنا إلى جنبكم قرية يقال لها الأبلة قلنا نعم. قال من يضمن لي منكم أن يصلى لي فى مسجد العشار ركعتين أو أربعا ويقول هذه لأبي هريرة سمعت خليلي أبا القاسم صلى الله عليه وآله وسلم يقول إن الله عز وجل يبعث من مسجد العشار يوم القيمة شهداء لا يقوم مع شهداء بدر غيرهم. أبوداؤد
“இப்ராஹீம் பின் ஸாலிஹ் பின் திர்ஹம் என்பவர் தனது தந்தை சொன்னதாகச் சொல்கிறார். நாங்கள் ஹஜ்ஜுக்காக வெளிப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது (அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு) ஒருவர் உங்களது ஊருக்கு அருகாமையில் “உபுல்லா” என்றதொரு கிராமம் இருக்கிறதா? என்று கேட்டார். (இது பஸராவுக்கு அருகில் பிரபலமானதொரு கிராமத்தின் பெயர்) ஆம் என்றொம். (அங்குள்ள) மஸ்ஜிதுல் இஷார் என்ற பள்ளிவாயிலில் அபூ ஹுரைராவாகிய எனக்காக இரண்டு அல்லது நான்கு ரக்அத்துக்கள் தொழுது கொள்வதற்கு உங்களில் யார் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டார். (காரணம்) அப்பள்ளியில் இருந்து மறுமையில் சில ஸுஹதாக்கள் எழுப்பாட்டப்படுவார்கள். பத்ர் ஷுஹதாக்களுடன் அவர்களைத் தவிர வேறு எவரும் எழுப்பாட்டப்பட மாட்டார்கள் என்று எனது நண்பர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்று அவர் சொன்னார்.”
பார்க்க: அபூ தாவூத்.
இந்த ஹதீதுக்கு விளக்கமளிக்கும் மௌலானா கலீல் அஹ்மத் ஸஹாரன்பூரி அவர்கள், பிறர்களுக்காக நாம் உடல் ரீதியான வணக்கங்களையும் மேற்கொள்ள முடியும். மேலும் வலிமார்களின் நினைவுச் சின்னங்கள் தரிசிக்கப்பட்டு அருள் பெறப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
பார்க்க: பத்லுல் மஜ்ஹுத். மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹஹ பக்கம் 254
அபூ தாவூத் ஹதீத் கிரந்தத்தின் மற்றுமொரு விரிவுரையாளரான மௌலானா அபுத் தீப் அவர்கள் “அவ்னுல் மஃபூத்” என்று தனது நூலில், மஸ்ஜிதுல் இஷார் என்ற பள்ளிவாயிலானது அருள் பெறுவதற்காக தொழப்படும் பள்ளிவாயில் என்று பிரபல்யமான பள்ளியாகும் என்று குறிப்பிடுகிறார்.
(மஃபாஹீம் பக்கம் 254)
كان النبي صلى الله عليه وآله وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وسلوا له بالتثبيت فإنه الآن يسأل. ابو داؤد
“ஒரு மைய்யித் நல்லடக்கம் செய்யப்பட்டு முடிவுற்றால் அவ்விடத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நின்று கொண்டு உங்களது சகோதரனுக்காக இஸ்திஃபார் செய்யுங்கள். கலிமாவில் நிலைத்திருக்கப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவர் இப்பொழுது கேள்வி கேட்கப்படப் போகிறார் என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.” அபூ தாவூத்
தாவரங்களின் மூலமா கப்ராளி அருள் பெறுதல்
لعله يخفف عنهما ما لم ييبسا. البخاري ومسلم
“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவரின் கப்ருகளில் ஈச்ச மர ஓலையை வைத்து நட்டி விட்டு இவ்விரண்டும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் இவற்றின் அருளால் அவர்களின் வேதனைகள் குறைக்கப்படும் என்று சொன்னார்கள்.” புகாரி, முஸ்லிம்
மண்ணின் உள்ளே வாழும் ஒருவரின் மூலமாக மண்ணின் மேலே வாழும் ஒருவர் அருள் பெறுதல்
“உங்களது செயல்கள் எனக்குக் காண்பிக்கப்படுகிறது. அதில் நல்லதைக் கண்டால் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். தீயதைக் கண்டால் அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” பார்க்க: பஸ்ஸார், ஜாமிஉஸ் ஸகீர், தபகாதுல் குப்ரா, மஜ்மஉஸ் ஸவாயித்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இந்த மண்ணின் மேலே வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் யார் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டார்களோ அந்தப் பாவிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கின்றவர் அல்லாஹ்விடம் அவர் பாவமனிப்புக் கோர வேண்டும். அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் அவருக்காகப் பாவ மன்னிப்புக்கோர வேண்டும். அப்பொழுதுதான் அவர் அல்லாஹ்வை மன்னிப்பாளனாகவும் இரக்கமுள்ளவனாகவும் பெற்றுக் கொள்வார் என்று இந்த உம்மத்தினருக்கு அருள் செய்த அல்லாஹ், இப்பொழுது நாம் செய்யும் அமல்களை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கின்றான்.
إن أعمالكم تعرض على أقاربكم وعشائركم من الأموات فإن كان خيرا استبشروا به وإن كان غير ذلك قالوا اللهم لا تمتهم حتى تهديهم كما هديتنا. أحمد وصححه الألباني بعد أن كان ضعفه. الصحيحية 2758
“நிச்சயமாக உங்களது செயல்கள் உங்களது மரணித்தவர்களுக்கு எடுத்துக் காண்பிக்கப்படுகிறது. அதில் நல்லதைக் கண்டால் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள். தீயதைக் கண்டால் எங்களுக்கு நேர் வழி காட்டியது போல அவர்களுக்கும் நேர் வழி காட்டாத வரை அவர்களை மரணிக்கச் செய்து விடாதே என்று அவர்கள் (மண்ணின் உள்ளே வாழ்பவர் மண்ணின் வெளியே வாழ்பவருக்கு) பிரார்த்திக்கின்றார்கள் என்று நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.”
பார்க்க: அஹ்மத். இதுவொரு ழயீபான ஹதீத் என்று சொன்ன பிறகு ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளார் ஜனாப் அல்பானி.
முதல் அறுவடைக்கு அருள் பெறுதல்
عن أبي هريرة رضي الله تعالى عنه كان الناس إذا رأوا أول الثمر جاءوا به إلى رسول الله صلى الله عليه وآله وسلم فإذا أخذه رسول الله صلى الله عليه وآله وسلم قال اللهم بارك لنا فى ثمارنا وبارك لنا فى صاعنا ومدنا. الترمذي وصححه الألباني
“கணிகளின் முதல் அறுவடையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கொண்டு வருவார்கள். அப்பொழுது அதனைப் பிடித்து யா அல்லாஹ் எங்களது கணிகளிலும் அளவையிலும் அருள் புரிவாயாக என்று துஆச் செய்வார்கள்.” திர்மிதி.
இந்த ஹதீதின் அடிப்படையில்தான் நெல் போன்ற தானியங்கள் முதன் முதலில் அறுவடை செய்யப்படும் போது விசேட துஆப் பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த வழமை நமதூர்களில் ஒன்று இரண்டாவது இன்றும் காணப்படுகிறது.
முதன் முதலாக பயிர்கள் விதைக்கப்படும் போதும் அவ்வாறே அறுவடை செய்யப்படும் போதும் துஆக்கள் ஓதப்பட்டு வந்த காலப்பகுதிகளில் நாம் கண்ட அருட்கொடைகளை அவ்விசேட துஆக்கள் நிறுத்தாட்டப்பட்ட பின்னர் காண முடியாதுள்ளது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடிகளில் ஒரு முடி தன்னிடம் இருப்பதானது இந்த உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் விடச் சிறந்ததென்று ஸஹாபாக்கள் கருதி இருக்கின்றார்கள் என்றால் அந்த திரு முடியை தனி விமானத்தில் எடுத்துச் செல்லுதல், அதனை ஆயிரம் கிலோ தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தல் என்பன சாதாரண விடயமே தவிர வீண் விரயமாக கருதப்பட மாட்டாது. அவ்வாறு கருதுபவர் வீணாப் போன ஒருவராகும்.
ஸாலிஹீன்களின் கப்ரை தொட்டுத் தடாவி முத்தமிட்டு அருள் பெறலாம். இதுவே ஸாலிஹான அறிஞர்களின் கருத்தாகும் என்ற இமாம் தபரியின் கருத்தினை இமாம் சம்ஹுதி அவர்கள் வஃபாஉல் வஃபாவில் பதிவிட்டுள்ளார்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பின் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அருளை நாடி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உபயோகம் செய்த கட்டிலில் வைத்து சுமந்து செல்லப்பட்டதாக இப்னு ஸைய்யிதுந் நாஸ் என்பவர் தனது அஸ்ஸீரா என்ற நூலில் பதிவிடுகிறார்.
மதீனா முனவ்வராவின் பிள்ளைகளுக்கு பேசுவதில் ஏதாவது பிரச்சினை இருக்குமானால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவின் வாயிலுக்கு வருவார்கள். அங்குள்ள திறப்பை எடுத்து அப்பிள்ளையின் வாயில் வைத்து விடுவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் பிரச்சினைகள் பறந்து விடும். இவ்வாறானதொரு வழமை மதீனத்து மக்களிடம் இருந்து வந்ததை நான் கண்டேன் என்கிறார் அல்லாமா பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இதனை நுஸ்ஹதுந் நாழிரீன ஃபீ மஸ்ஜிதி ஸெய்யிதில் அவ்வலீன வல் ஆகிரீன என்ற அவரது நூலில் பதிவூ செய்துள்ளதாக “அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி” என்ற நூலின் 56 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறானதொரு வழமை மக்கத்து மண்ணிலும் இருந்து வந்ததை தான் கண்டதாகக் கூறுகிறார் இமாம் ஃபாகிஹீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். நாங்கள் எங்கள் குழந்தைக்கு இவ்வாறு செய்திருக்கின்றொம்; என்ற தகவலும் பதிவாகியூள்ளது.
மதீனத்து மண்ணில் குழ்தையொன்று பிறந்து நாட்பதாம் நாளாகின்றபோது அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாய்மார்கள் வெள்ளிக் கிழமை மற்றும் திங்கள் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வாயிலுக்கு வருவார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவில் பணி புரிபவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவில் உள்ள போர்வையை அவர்கள் தலை மேல் வைத்து துஆச் செய்யும் பழக்கமும் இருந்ததைக் கண்டதாக அல்லாமா பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேற்சொன்ன நூலில் பதிவு செய்கின்றார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பரிசுத்த ரௌழா ஷரீபின் மேல் கண்ட மண்ணை அஷ்ஷெய்கு உமர் அஷ்ஷஷுனாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தாடியினால் துடைத்து அருள் பெற்றதாகவூம் இமாம் பர்ஸன்ஜீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பள்ளி வாயில் சுத்தம் செய்யப்படுவதற்காக உபயோகம் செய்யப்பட்ட துடைப்பத்தினை ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது தலையில் வைத்து முத்திக் கொண்டதாக “அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி” என்ற நூலின் 62 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நமது உயிரிலும் மேலான உத்தம நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் அவர்களுடன் தொடர்புள்ள வஸ்துக்களையும் மதித்து கௌரவித்து அருள் பெற்று வந்திருப்பதுதான் இஸ்லாமிய வரலாறாகவும் கலாசாராமாகவும் இருந்திருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் பல இன்றுள்ள நவீன நயவஞ்சகர்களினால் பரிகாசம் செய்யப்படும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. இவ்வாறானவர்களின் சகவாசத்தில் இருந்து எம்மையும் எமது சந்ததிகளையும் மாணவ மாணவிகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
வஹ்ஹாபிஷம் என்ற பனூ இஸ்ரவேலர்களின் பிள்ளையின்பிள்ளைகளான தப்லீக், ஜமாஅத்தே ,இஸ்லாமி, கர்ணீ ஆகியோர்களுக்கு நபிமார் மற்றும் ஸாலிஹீன்களின் பிறந்த வாழ்ந்த அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் வாயிலாக அருள் பெறுவது அணாச்சாரமாக பித்அத்தாக மூட நம்பிக்கையாக மட்டுமல்ல அது கப்ர் வணக்கமாகவும்அவர்கள் பார்வைக்குத் தெரிகிறது.பன்றியோடு சேர்ந்த கன்றும் பீ தின்னும் என்றாற்போல அன்று பனூ இஸ்ரவேலர்கள் செய்த அதே அநியாயத்தினை இன்று அவர்களின் மேற்சொன்ன பரம்பரையினர் செய்து கொண்டிருக்கின்றனர்.
எனவே நபிமார் மற்றும் வலிமார்களோடு தொடர்புள்ள பொருட்களை கண்ணியப்படுத்தி அவற்றைத் தரிசித்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள். இது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கான விசேட அடையாளமாகும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரின் மூலமாக அமரர்கள் அருள் பெறுதல்.
والله يعصمك عن الناس
“நபியே நாயகமே! உங்களை அல்லாஹ் மனிதர்களின் தீங்குகளில் இருந்து பாதுகாக்கின்றான்.”அல்மாயிதா வசனம் 67.
இந்த ஆயத்தின் அடிப்படையில் பாவிகளின் கரம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருவுடலையும் அதனைத் தாங்கி நிற்கும் அர்ஷை விட சிறப்பான பகுதியிலும் பட்டுவிடாது வஹ்ஹாபிகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாக்கின்றான்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தரிசிப்பதற்கென்று பயணம் மேற்கொள்வதையும் அவர்களது ரௌழாவைத் தொட்டு தடாவி அங்கங்களில் பூசி அருள் பெறுவதுபோன்ற அம்சங்களை கப்ர் வணக்கம் என்று கேடுகெட்ட நல்லொழுக்கமற்ற வஹ்ஹாபிகள் கூறி சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
யூத நஸாராக்களின் தோழமையில் அவர்கள் காணப்படுவதனால் ஷரீஅத் அனுமதிக்கின்ற பல விடயங்களை பித்அத் என்றும் ஷிர்க் என்றும் அவர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் அமரர்கள் மூலமாக அல்லாஹ் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தரிசிக்க வைக்கின்றான். அவர்களின் ரௌழாவைத் தொட்டு தடாவி அருள் பெறும் பாக்கியத்தினை அல்லாஹ் அமரர்களுக்கு வழங்கி இருக்கின்றான்.
أن كعبا دخل على عائشة رضي الله تعالى عنها فذكروا رسول الله صلى الله عليه وآله وسلم فقال كعب ما من فجر يطلع إلا نزل سبعون ألفا من الملائكة حتى يحفوا بالقبر يضربون بأجنحتهم القبر (أي يتبركون بقبر النبي صلى الله عليه وآله وسلم ويتمسحون) ويصلون على النبي صلى الله عليه وآله وسلم حتى إذا أمسوا عرجوا وهبط سبعون ألفا حتى يحفوا بالقبر يضربون بأجنحتهم ويصلون على النبي صلى الله عليه وآله وسلم بالليل وسبعون ألفا بالنهار حتى إذا انشقت عنه الأرض خرج فى سبعين ألفا من الملائكة يزفون.
“ஹழ்ரத் கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்தித்தபோது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அப்பொழுது ஹழ்ரத் கஃபு அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் 70 ஆயிரம் அமரர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ருக்கு வருகின்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழாவை தமது இறக்கைகளால் தடாவி அருள் பெறுகின்றார்கள். இன்னும் ஸலவாத் சொல்கின்றார்கள். மாலையானதும் அவர்கள் சென்று விடுகிறார்கள். பின்னர் மாலை 70 ஆயிரம் அமரர்கள் அவ்விடம் வருகின்றார்கள். அவர்களும் தமது இறக்கைகளால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் ரௌழா மூலமாக அருள் பெறுகின்றார்கள். ஸலவாத்தும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறு மறுமை நாள் வரை காலையிலும் மாலையிலும் அமரர்கள் வந்து செல்வார்கள். மறுமை நாள் உண்டானதும் 70 ஆயிரம் அமரர்கள் முன்னிலையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கப்ரில் இருந்து எழுப்பாட்டி அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறினார்.”
இத்தகவலை இமாம்களான சகாவி, இப்னுல் முபாரக், பைஹகீ, இப்னுல் ஜௌஸீ ஆகியோர் பதிவிடுகிறார்கள்.
தொடரும்.............










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக