திங்கள், 28 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறும் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலையும்.

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலை.


கி.பி.1187 முதல் 1196 வரை ஆண்ட இலங்கை மன்னன் (திஸ்ஸங்க மல்ல) என்ற அரசர் ஆதம் மலையினைத் தரிசித்துள்ளார். அங்குள்ள பாதச் சுவட்டை அவ்வரசர் கைகூப்பி வணங்கிக்கொண்டிருப்பதுபோன்றும் அங்குள்ள கல்லொன்றில் செதுக்கப்பட்டிருக்கின்றது. அதன் அருகே அரபியில் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்) அவர்களை அல்லாஹ் ஆசிர்வதிப்பானாக!.... மனித இனத்தின் தந்தை என்று பொறிக்கபட்டுள்ளது. பார்க்க: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 02-313.


ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)மலையைத் தரிசித்த பெருமக்கள்.

நபிமார், வலிமார்களுடன் தொடர்புள்ள சகல வஸ்துக்களும் பாதுகாக்கப்படவேண்டும். பராமரிக்கப்படவேண்டும். தரிசிக்கப்படவேண்டும். இது இஸ்லாம் கற்றுத் தரும் பாடமாகும். அந்த வகையில் நபியுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாதம் இலங்கையில் இருக்கிறதென்பதே ஊர்ஜிதம் செய்யப்பட்ட வரலாற்றுத் தகவலாகும். இதனை பன்னாட்டு முஸ்லிம்களும் தரிசித்துள்ளனர்.

கிரேக்கர்களும் ரோமர்களும் இலங்கையினை அரேபியர்களிடம் இருந்து அடையாளம் கண்டு கொண்டதாக வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்து அரபிகள் இலங்கையில் தங்கிச் சென்றுள்ளார்கள். ஆதம் மலை இலங்கையில் இருந்ததே அவர்கள் இப்பிரதேசம் நாடி வந்ததற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

கி.பி.1153க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கௌதுல் அஃழம் குத்புல் அக்தாப் ஷெய்குல் மஷாயிக் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மார்க்கப் பணியாற்ற இலங்கைக்கும் வந்திருக்கிறார்கள். அந்தக் கால கட்டத்தில் பாவா ஆதம் மலைக்கு பலாங்கொடை வழியாக பயணித்திருக்கின்றார்கள். தப்தர் ஜெய்லானி என்று சொல்லப்படுகின்ற இடத்தில் சுமார் 12 ஆண்டுகள் தியானத்தில் இருந்திருக்கிறார்கள். இது தொடர்பான பல தகவல்கள் தப்தர் ஜெய்லானி என்ற வரலாற்று நூலில் பார்வையிடலாம்.

இலங்கைக்கு வந்த மற்றொர் இறைநேசச் செல்வர் அப்துல்லாஹ் இப்னு கஃபீஃப் என்பவராகும். அவரைப் பற்றி இப்னு பதூதா தம்முடைய பிரயாண நூலில் குறிப்பிடு கின்றார். 

நாகூரில் அடங்கப்பட்டிருக்கும் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களும் ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இவர்களுடன் வந்த செய்யிதுனா ஷிஹாபுத்தின் வலிய்யூல்லாஹ் இலங்கையிலேயே தங்கி கண்டியில் அடங்கப்பெற்றார்கள். கி.பி.1855ல் இவர்களுக்கு தர்கா கட்டப்பட்டுள்ளது.

அரபாத்திலிருந்து ஆதம் மலையை தரிசிப்பதற்காக வந்த செய்யிதுனா அஷ்ஷெய்கு உஸ்மான் ஸித்தீக் இப்னு அப்திர் ரஹ்மான் வலிய்யுல்லாஹ் என்பவராகும்.
மாத்தறையில் அடங்கப்பட்டுள்ள யஹ்யா ஹாஜியார் அப்பா, அழுத்காமத்தில் அடங்கப்பட்டுள்ள ஷெய்கு ஹஸன் பின் உஸ்மான் மக்தூமி நாயகம் அவர்கள், கம்பளையில் அடங்கப்பட்டுள்ள பாபா கௌஃபி (கூஃபி பாவா) அவர்கள் மக்காவில் இருந்து வந்திருக்கின்றார்கள். வியாங்கொடைப் பகுதியில் உள்ள கஹட்டவிட்டவில் அடங்கப்பட்டிருக்கும்

ஷெய்கு இப்னு உமர் பாதிப் நாயகம் அவர்கள் யமனில் இருந்து கி.பி.1840ல் வந்துள்ளனர். இவ்வாறு இன்னும் பலர் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக அரப் நாடுகளில் இருந்து இலங்கை வந்திருக்கின்றார்கள். மார்க்கப் பணியாற்றியுள்ளனர். பார்க்க: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் 2-313. 

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...