படைப்பாளி ஒருவன் உள்ளான். அவனுக்கு உள்ளமை உள்ளது. பண்புகள் இருக்கிறது. பெயர்கள் இருக்கிறதென்பதற்கான ஆதாரம் இந்த உலகமாகும். இந்த உலகத்தை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் மேற்சொன்னது புரிந்து விடும். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் அதைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான சான்றாக சின்னங்களாக இருந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு உலகமே அவன் ஒருவன் உள்ளான் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான ஆதாரமாக அத்தாட்சியாக சின்னமாக இருந்தபோதிலும் அல்லாஹ் சில பொருட்களைத் தெரிந்தெடுத்து அவை தன்னுடைய சின்னம், தன்னுடைய அத்தாட்சி என்று அடையாளப்படுத்திக் காண்பித்து அப்பொருட்களை அவனாகவே புனிதமான பொருட்கள் என்று பிரகடனம் செய்திருக்கின்றான்.
அல்லாஹ் எந்தெந்த வஸ்துக்களை அவனது சின்னங்கள், அத்தாட்சிப் பொருட்கள் என்று கூறி புனிதப்படுத்தி வைத்தானோ அவற்றினை மனிதனும் புனிதப்டுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு யார் அப்பொருட்களை சங்கைப்படுத்தி புனிதப்படுத்துகிறாரோ அவர் தக்வா உள்ள ஒருவர்என்பதற்கான ஆதாரமாகும் என்றும் அல்லாஹ் அறிவித்திருக்கின்றான்.
அல்லாஹ்வின் சின்னங்களாக அத்தாட்சிப் பொருட்களாக அடையாளப்படுத்தப்படுபவைகளும் அவற்றொடு தொடர்புள்ளவைகளும் என்றென்றும் புனிதப்படுத்தப்படவேண்டியவைகள்தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
அல்லாஹ்வின் அத்தாட்சிப் பொருட்களில் அதி விசேடமான மிகப் பெரிய அத்தாட்சியாக சின்னமாக எது இருக்கும்? என்று தேடிப் பார்த்தால் அது நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர வேறில்லையென்பதை அறியலாம்.
எனவே நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் முக்காலத்திலும் மதிக்கப்பட வேண்டிய ஓர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னமாக இருக்கின்றார்கள்.
ومن يعظم حرمات الله فهو خير له عند ربه. الحج 30
“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை யார் கண்ணியப்படுத்துகிறாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்.”
அல்ஹஜ் 30
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. الحج 32
“எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் பயபக்தியில் உள்ளதாகும்.” அல்ஹஜ் 32
எனவே அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை அடையாளம் கண்டு அவற்றை கண்ணியப்படுத்தி வைப்பதனூடாக நாம் தக்வாதாரிகளாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக