சனி, 26 ஜனவரி, 2019

பேருவளை வரலாறு.

பேருவளை வரலாறு.
அல்ஆலிமுல் ஃபாழில் ழிஆவுத்தீன் அல் உஸ்மானீ அல்மஹ்ழரி


கி.பி. 700ல் துருக்கி நாட்டு சுல்தான் ஜமாலுத்தீன் பின் அலாவூத்தீன் என்பவர் பதினொரு தோழர்களுடன் கப்பலொன்றில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். நீண்ட நாட்களாக கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் இறுதியாக கரையொதுங்கிய சந்தர்ப்பத்தில் கரையைக் கண்ட மகிழ்ச்சியில் பர்பர் - தரை தரை என்று கூறியிருக்கிறார்கள். பர்பர் என்ற சொல் இன்று பேருவளை என்றாகிட்டது. சுல்தான் ஜமாலுத்தீன் நபித் தோழர் ஸெய்யிதுனா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பதினோராவது தலைமுறையில் உள்ள ஒருவராகும்.

சுல்தான் ஜமாலுத்தீன் பேருவலைப் பிரதேசத்தில் தரை இறங்கிய அச்சந்தர்ப்பத்தில் அப்பிரதேச அரசன் வத்ஹிமியின் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை அழைத்துக்கொண்டு அரசவைக்கு செல்கின்றனர். பேருவளை அரசனுக்கு துருக்கி அரசர் தன்னுடைய நிலைமைகளை விளக்கிய பின்னர் துருக்கிய அரசரை பேருவளை அரசர் அரச மரியாதை செய்து அவர் வீட்டில் தங்குமாறும் கூட வந்தவர்களை மார்க்கப் பணியாற்ற தாம் விரும்பும் பிரதேசம் செல்வதற்கும் அனுமதி வழங்கினார்.



பேருவளை அரசன் வத்ஹிமி தன்னுடைய சகோதரி ஒருவரை துருக்கிய மன்னருக்கு திருமணமும் இஸ்லாமிய முறைப்படி செய்து வைத்தார். உஸ்மான் என்ற ஆண் குழந்தை அத்தம்பதியினருக்குக் கிடைத்தது. இந்த உஸ்மானின் பரம்பரையினர் இன்று வரை பேருவளைப் பிரதேசத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் செய்திகள்கூட அப்பரம்பரையினரில் ஒருவரான அல்ஆலிமுல் ஃபாழில் ழிஆவுத்தீன் அல் உஸ்மானீ அல்மஹ்ழரி என்பரிடம் மேற்கொண்ட நேர்காணலில் பெற்றுக் கொள்ளப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கிய மன்னருக்கு பேருவளை மன்னன் தனது சகோதரி ஒருவரை திருமணம் முடித்துக் கொடுத்த வரலாற்றுப் பின்னணியுடன் மன்னரின் மகள் ஒருவர் இஸ்லாத்தினை தழுவும் வரலாறும் ஆரம்பிக்கிறது. இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட பேருவளை மன்னனின் மகளை இரண்டாவது புவனேகபாகு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த அரச குமாரர் குருணாகல் பிரதேச முஸ்லிம் மன்னன் வத்ஹிமி கலே பண்டார என்றழைக்கப்படும் குறைஷான் இஸ்மாயீல் ஆகும். பார்க்க: இலங்கை சோனக வரலாறு.

துருக்கிய மன்னன் ஜமாலுத்தீன் என்பரவால் பேருவளை பிரதேசத்தில் பள்ளிவாயில் ஒன்றும் கட்டப்பட்டது. அது தர்கா நகர் சீனாதுறை ஜும்ஆப் பள்ளிவாசலாகும். இந்தப்பள்ளிவாசல் 1000 ஆயிரம் ஆண்டுகளை பூர்த்தி செய்துகொண்டபோது சோலை மலர் என்ற பெயரில் சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டது. இதிலும் மேற்குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியிருப்பதைக் காணலாம்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...