திங்கள், 6 ஜனவரி, 2020

முதல் மனிதர் வாழ்ந்த பூமி,முதல் மனிதர் வாழ்ந்த காலப் பகுதி,முதல் மனிதர் பேசிய பாசை..


முதல் மனிதர் வாழ்ந்த பூமி



ஆதி பிதா ஆதம் நபி அலைஹிஸ்ஸல்லாம் அவர்கள் பூமியிலுள்ள கரும் பிரதேசம், வெண்மையான பிரதேசம், மலைப் பிரதேசம், பள்ளத்தாக்குப் பிரதேசம், கரடுமுரடான பிரதேசம், மிருதுவான பிரதேசம் ஆகிய நான்கு கோணங்களிலுமிருந்து எடுக்கப்பட்ட மண்ணினால் படைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே, ஆதிகால மனிதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் நமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனாலும், ஆதி பிதா ஆதம் அவர்கள் பாதம் பட்ட பிரதேசத்தின் இன்றையப் பெயர் என்ன? என்னும் வினாவுக்கான பதிலுக்கு பின்வரும் கருத்துக்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறன.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு அறிவிப்பை இப்னு சஃது, இப்னு அசாகிர் ஆகிய இரு அறிஞர்கள் அறிவித்த அறிவிப்பின் கருத்தாவது நபி ஆதம் அலைஹிஸ்ஸல்லாம் அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதி (ஸ்ரீலங்கா)யில் இறக்கி வைக்கப்பட்டதாகவும், ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்கள் ஜித்தாவில் இறக்கி வைக்கப்பட்டதாகவும் வந்துள்ளது. பின்னர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களைத் தேடிச் சென்று மக்கா அருகிலுள்ள ‘முஸ்தலிஃபா’ என்ற இடத்தில் ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தார்கள்.

‘முஸ்தலிபா’ என்பது ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடியவர்கள் ஒன்று சேர வேண்டிய இடங்களில் ஓர் இடமாகும். முஸ்தலிபா என்ற சொல் ازدلف இஸ்தலஃபஎன்ற அரபி வார்த்தையில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் அணுகுதல் என பொருட்படும். அதாவது அந்த இடத்தில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹவ்வா அலைஹஸ்ஸலாம் அவர்களை அணுகிய (சந்தித்த)தால் ‘முஸ்தலிபா’ எனப் பெயர் வந்து இருக்கலாம். முஸ்தலிஃபா என்னும் இடம் அரஃபா மைதானத்திற்கு அருகிலுள்ள பகுதியாகும். அரஃபாவில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களெல்லாம் அருகரிகிலுள்ள இடங்களின் பெயர்களாகும். 

அல்-தபரானீ, அபூ நுஅய்ம் மற்றும் இப்னு அசாகிர் ஆகியோர், அபு ஹுரைறா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அறிவிக்கின்ற ஹதீஸில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் ஒரு பகுதி (ஸ்ரீலங்கா)யில் இறக்கப்பட்டதாக வந்துள்ளது. தபரானியின் மற்றோரு அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய ஹதீஸில், நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

மேற்கூறப்பட்ட பல அறிவிப்புகளில் இருந்து பார்க்கும் போது, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக பெரும்பாலோரின் கருத்து உள்ளது. இப்னு பதூதா என்ற மொரோக்கோ நாட்டைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் இவ்விசயத்திற்காகவே இலங்கை வந்து இவ்விசயங்களை ஆய்வு செய்தார். ஆதம் மலையின் வழியில் ஷியாமின் குகை இருக்கிறது. ஷியாமே ஆதமின் மகனான ஷீத் என்று இப்னு பதூதா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இம்மலையை ஆதமின் சிகரம் என்றே குறிப்பிடுகின்றனர். அங்கே இருப்பது ஆதித் தந்தையின் பாதம் என்று நம்பியதாலேயே பழங்காலத்திலிருந்தே யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அதைத் தரிசிப்பதற்காக வந்தனர். அரபுலகில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து வாழ்ந்து மறைந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத பெரியார்களெல்லாம் ஆதம் மலையைத் தரிசிக்கும் நோக்கில் வந்தவர்கள் ஆகும். 1960 கள் வரை இம்மலையின் உச்சியில் முஸ்லிம்களின் பள்ளிவாசலும் இந்துக்களின் கோயிலும் பெளத்தர்களின் விகாரையும் காணப்பட்டது. அப்போதெல்லாம் மும்மதச் சமரசம் அங்கு நிலவியுள்ளது. எனினும் வஹாப்வாத பயங்கரவாதிகளின் வருகையை அடுத்து இச்சமரசம் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போனது.

இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் போன்றோர் இந்தியாவின் எந்தப்பகுதியில் ஆதம் நபியவர்கள் இறக்கப்பட்டார்களோ அந்தப் பகுதிக்குதஜ்னாஎன்பது பெயராகும் எனக் கூறுகின்றனர். இந்த தஜ்னாதான்தக்கன்எனப் பின்னர் பெயர் மாற்றமடைந்தது என்றும் கூறப்படுகிறது. இது இந்தியாவின் தென்பகுதிக்குச் சொல்லப்படும் பிரபலமான ஓர் பெயராகும். நூல்: அரப் ஹிந்து கே தஅல்லுகாத், தப்சீர் ஃபத்ஹுல் கதீர்

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில்தான் இறக்கப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கும் பல தகவல்கள்அல்மிலல் வந்நிஹல்  எனும் நூலிலும் பதிவாகியுள்ளது.

சிறந்த பிரதேசம்



عن على رضي الله تعالى عنه قال خير واد فى الناس وادي مكة وواد نزل به آدم بأرض الهند

ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்காவும், ஆதம் அவர்கள் இறங்கிய இந்திய மண்ணும் மிகச் சிறந்த பகுதிகளாகும்.”

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதல் சுஜூத் பதிவான பூமி இலங்கை. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதல் பயணம் இடம் பெற்ற பூமி இலங்கை. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை முதன் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூமி இலங்கை. ஹழ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன் முதலில் இறங்கிய பூமி இலங்கை. முதன் முதலில்அதான்- பாங்கோசைசொல்லப்பட்டதும் இலங்கையில்தான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவிலிருந்து மக்கா நோக்கிப் பயணம் செய்தபோது எந்தெந்த இடங்களில் தன்னுடைய பாதங்களைப் பதித்தார்களோ அந்த இடங்களெல்லாம் தலை நகரங்களாகின.

முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடர்பில் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இதுபோன்ற இன்னும் பல தகவல்களைப் பார்வையிட விருப்பம் உள்ளோர், இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் الدر المنثور அத்துர்ருல் மன்ஸூர் என்னும் தஃப்சீரைப் பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது السبحة المرجان فى آثار هندستان  எனும் நூலைப் பாருங்கள்.

முதல் மனிதர் வாழ்ந்த காலப் பகுதி

இது நாள் வரையில், கடந்த இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதி மனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியதாவது:- ‘நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின் உடல் படிவங்கள் குசேம் குகையில் கிடைத்துள்ளன. மனிதப் பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய பிளைஸ் தோகின் காலத்தைச் சேர்ந்தது. இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.’

ஆபிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும் உலகின் தாய்வீடு ஆபிரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் எனத் தெரிகிறது.

எனினும் ஆதி மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்காசியாவின் இந்திய நாட்டின் இலங்கையில் வாழ்ந்த மனிதர் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்குமுன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதம்கள் தோன்றியுள்ளார்கள் என்று இப்னு பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடைய புத்துஹாத்துல் மக்கியா என்னும் நூலில் ஆதத்திற்கு முன் ஓரிலட்சம் ஆதம்களும் அவர்களுடைய கூட்டத்தினர்களும் தோன்றி மறைந்துள்ளனர் என்று கூறுகின்றார்கள்.

முதல் மனிதர் பேசிய பாசை


தமிழ் மொழிதான் தாய் மொழி, ஆதி மொழி என ஒரு சாரார் கூறுகிறார்கள். சோனகத் தமிழ்தான் ஆதி மொழி என இன்னொமொரு சாரார் சொல்கிறார்கள். இவ்வாறு ஆதி மனிதன் பேசிய ஆதி மொழி எங்கள் மொழிதான் என்று பலரும் பல மொழிகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு யார் எந்த மொழியை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதனாலும் நமக்குப் பிரச்சினையில்லை என்பதை பின்வரும் கூற்று தெளிவுபடுத்தி வைக்கிறது.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் தஆலா 40 ஆயிரம் பாஷைகளைக் கற்றுக் கொடுத்தான். கியாமத்து நாள் வரையுள்ள அவரது சந்ததியினராகிய மனிதர்கள் பேசும் சகல பாஷைகளையும் அவர் பேசுபவராக இருந்தது அவருக்குள்ள முஃஜிஸாத்துக்களில் ஒன்றாகும். எனவே, மனிதன் ஒருவனுக்கு ஒருவன் சகோதரனைப் போல், ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிக்கு சகோதர மொழியாகும் என்பதே உண்மையாகும்.

முதல் மனிதர் அடக்கம் செய்யப்பட்ட பூமி


இந்தியாவில் எவ்விடத்தில் இறக்கப்பட்டார்களோ அவ்விடத்திலேயே ஆதம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இதுவே பரவலான தகவலாகும். நூல்: அல்-பிதாயா வந்நிஹாயா

நபியுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வரான ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மண்ணறை ஹிந்துஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அறிஞர்கள் பலர் எழுதி வைத்துள்ளனர். அல்லாமா முஹத்திஸ் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அவர்களில் ஒருவராகும். ஷாம் (சிரியா மற்றும் அதன் சுற்று) பகுதியில் மரணமடைந்தாகவும் தகவல் வந்துள்ளது.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...