செவ்வாய், 31 டிசம்பர், 2019

மகாமு இப்ராஹீம் "என்னுரை,அல்லாஹ்வின் முதல் இல்லம்,பைத்துல் மஃமூர்,..


بسم الله الرحمن الرحيم وبه استعين

الحمد لله حمدا يليق بالذات الوحدانية والصلاة والسلام على أشرف المخلوقات سيدنا محمد عليه الصلاة والسلام اللهم صل وسلم على سيدنا محمد القائل إن لله ملائكة سياحين يبلغونى عن أمتي السلام وصل على المكمل المبجل القائل من دعا بهؤلاء الدعوات فى دبر كل صلاة مكتوبة حلت له الشفاعة مني يوم القيمة اللهم أعط محمدا الوسيلة واجعل فى المصطفين محبته وفى العالمين درجته وفى المقربين داره ورضي عن آله الأكرمين وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين

என்னுரை




வேதக்காரர்களும் இணை வைப்பவர்களுமான காஃபிர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (தம் நிராகரிப்பை விட்டு) விலகுபவர்களாக இல்லை.” சூரத்துல் பய்யினாவசனம் 01

وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ

மேலும் வேதம் கொடுக்கப்பட்ட அவர்களிடம் (தெளிவான) அத்தாட்சி வந்த பின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை.” சூரத்துல் பய்யினாவசனம் 04

இணைவைப்பாளர்களும் வேதக்காரர்களும் தங்கள் வேதத்தில் முன்னறிக்கை செய்யப்பட்ட “தெளிவான அத்தாட்சி” வந்து விட்டதைத் தெரிந்து கொண்டுதான், அதனை அவர்களெல்லாம் வேண்டுமென்று நிராகரித்ததாக சூரத்துல் பய்யினா – தெளிவான அத்தாட்சி என்று பெயரிடப்பட்டுள்ள அத்தியாயத்தின் மேற் சொன்ன இரு வனங்களும் விளக்குகின்றன. ஒருவர் விஷயமறியாமல் ஒன்றை நிராகரிப்பது பழிக்கத்தக்க காரியமாகும்.  

அல்குர்ஆன் எதைக் குறித்து தெளிவான அத்தாட்சியென்று பேசிக் கொண்டிருக்கிறதோ அதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேலி செய்த காரணத்தினால், ஜாஹிலிய்யாக் காலத்து இணைவைப்பாளர்களும் வேதக்காரர்களும் எவ்வாறு காபிர்களாகினார்களோ அதேபோன்று அத்தெளிவான அத்தாட்சியைப் பெயரளவில் அங்கீகரித்துக் கொண்ட போதிலும் உள்ளுக்குள்ளே அதனை அவமானப்படுத்தி வைக்கும் விதத்திலான கருத்துக்களைப் பதிவு செய்து வைத்துள்ள தலைமைத்துவப் பீடங்களைப் பின்பற்றும்  காரணத்தினால்தான் சமகால இஸ்லாமிய உம்மத்துக்கு மத்தியில் முரண்பாடும் பிளவும் தோன்றியுள்ளது எனலாம். எனவே  “தெளிவான அத்தாட்சி” என்றால் என்னவென்பதைத் தெளிவுபடுத்தி வைக்க வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கிருக்கிறதென்பதை காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

அல்குர்ஆன் அறைகூவிக் கொண்டிருக்கும் “தெளிவான அத்தாட்சி” என்றால் என்னவென்பதை உரிய விதத்தில் ஈமான் கொள்வோமாக இருந்தால்  இஸ்லாமிய மார்க்கத்தில் தற்காலியமாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இயக்கங்களெல்லாம் தொலைந்து சென்று ஓர் அணியில் ஒன்று திரளுவதுபோல், பல மதங்கள் என்ற பேச்சு நீங்கி ஒரே மதம் என்ற நிலையும் ஏற்படும். இன்ஷாஅல்லாஹ். அதனைத் தெளிவுபடுத்தி வைக்கும் பாணியில்தான்  இந்நூல் அதன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

2:1253:97 ஆகிய குர்ஆன் வசனங்களில்மகாமு இப்ராஹீம்என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “மகாமு இப்ராஹீம் என்பது ஒரு குறிப்பிட்டகல் அல்ல; தற்போது, “இப்ராஹீம் நபியின் பாதத்தின் அடிச்சுவடுஎன்ற பெயரில் அக்கல்லின் மீது ஒரு அச்சு உள்ளது. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்தக் கல் மீது இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்துள்ளது என்று கூறுவது கட்டுக்கதையாகும். ‘அந்தக் கல்லில் காணப்படும் பாத அச்சு ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது’ என்றதொரு கருத்து வஹாப்வாத பயங்கரவாதிகளினால் பாரம்பரிய முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுவதைக் காண முடிகிறது. இவ்வாறான கருத்தின் உண்மை நிலையை உணர்த்தும் வகையில் இந்நூலுக்குமகாமு இப்ராஹீம்என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மகாமு இப்ராஹீம் என்னும் இடத்தில் தென்படுகின்ற கால் பாதச் சுவடுகள், அல்லாஹ்வின் பேரருளான நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் பொற் பாதச் சுவடுகளுக்கு ஒப்பாக இருக்கிறதென்று அருமை ஸஹாபாக்கள் சொல்லியுள்ளார்கள். இற்காகவே இத்தலைப்பு தொகுப்புக்குத் தெரிவானது.

யா அல்லாஹ், அருமை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் பொற் பாதங்களின் பொருட்டினால் இப்பணியை அங்கீகரிப்பதோடு இவ்வாறான பணிகளை மென்மேலும் புரிவதற்கு உடலிலும் உள்ளத்திலும் முழுமையான ஆரோக்கியத்தினை வழங்கிடுவாயாக!

யா அல்லாஹ்! உனது ஹபீபான அருமை நாயகம் முஜ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் அருளினால் அவர்களின் சமூக மக்களான இஸ்லாமியர்களைப் பாதுகாப்பாயாக!. இஸ்லாமியர்களாக வாழும் பாக்கியத்தினை வழங்கிடுவாயாக!. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தினை சகலருக்கும் கொடுத்தருள் புரிவாயாக!. எமது இப்பணியை ஏற்றுக்கொண்டு வுழுவோடும் ஸலவாத்தோடும் ஷஹீதாக மரணிக்கும் நல்வாய்ப்பினை எமக்கும் எனது மனைவி மக்கள், உற்றார் உறவினருக்கும், மாணவ மாணவிகளுக்கும், உனது மார்க்கப் பணிக்காகப் பணியாற்றும் சகல சகோதரர்களுக்கும் தந்தருள் புரிவாயாக!.

எங்கள் நாடான இலங்கைத் திரு நாட்டில் வாழும் சர்வ மத மக்களும் சகோதரர்களாக வாழ்ந்து இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்வதற்கு தெளஃபீக் செய்வாயாக! பிற நாடுகளின் ஆதிக்கங்களில் இருந்தும் ஆட்கொல்லி வியாதிகள் போதை பொருள் பாவனை, பயங்கரவாதம், தீவிரவாதம், வஹாப்வாதம், பேரினவாதம் ஆகியவற்றில் இருந்தும் எம்மையும் எமது நாட்டையும் பாதுகாப்பாயாக! ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வஸல்லம்.


وإن تجد عيبا فسد الخللا   جل من لا له عيب وعلا
وما بها من خطإ ومن خلل    أذنت فى إصلاحه لمن فعل
لكن بشرط العلم والإنصاف     فإذا من أجمل الأوصاف
والله يهدي سبل السلام    سبحانه بحبله إعتصام

-ஆசிரியர்

اللهم إني أقدم إليك بين يدي كل نفس ولمحة ولحظة وطرفة يطرف بها أهل السموات وأهل الأرض وكل شيء هو فى علمك كائن أو قد كان اللهم إنى أقدم إليك بين يدي ذلك كله وقبل ذلك كله وبعد ذلك كله ومع ذلك كله وعند ذلك كله وفى ذلك كله اللهم لك الحمد دائما مع خلودك ولك الحمد حمدا لا منتهى له دون مشيتك ولك الحمد حمدا لا يزيد قائلها إلا رضاك ولك الحمد حمدا مليا عند كل طرفة عين وتنفس نفس ملء ما علم وعدد ما علم وزنة ما علم اللهم صل وسلم على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصرالحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة فائقة جميع صلوات خلق الله دائمة بدوام ملك الله مضروبة فى كل عدد فى علم الله بعدد كل ما فى علم الله وعرفنا بها إياه معرفة أبدية بمحض فضلك يا ألله ملء ما علم 
وعدد ماعلم وزنة ما علم

அல்லாஹ்வின் முதல் இல்லம்




إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

நிச்சயமாக மனிதர்களுக்கு (அவர்கள் வணங்குவதற்காக) முதன்மையாக வைக்கப்பெற்ற (இறை) இல்லமானது பக்காவில் இருப்பதுதான். அது பாக்கியமுடையதாகவும் உலகத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் (இருக்கிறது).” ஆல இம்ரான்வசனம் 95

ஹழ்ரத் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்களிடம் பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?” எனக்கேட்டேன். அதற்கு அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம்” (கஃபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். அல் மஸ்ஜிதுல் அக்ஸாஎன்று கூறினார்கள். இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)” என்று கேட்டேன். நாற்பது வருடங்கள்என்று கூறினார்கள். நூல்: புகாரி

பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளியாக கஃபா ஆலயம் இருந்த போதிலும் அது நமக்கு முதல் கிப்லாவாக இருக்க வில்லை. பூமியில் இரண்டாவது பள்ளியாக அமைக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிதான் முதல் கிப்லாவாக சொற்ப காலம் இடம் பிடித்திருந்தது.

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மா மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட பின்னர்தான் முதல் பள்ளியான , நாயகம் அவர்களுக்காக கிப்லாவாக ஆனது.

முதல் பள்ளியைக் கட்டிய முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான், இரண்டாவது பள்ளியைக் கட்டிய முதல் மனிதரும் ஆவார். நூல்: அத்தீஜான், ஷரஹ் சுனன் நசாயி,ஷரஹ் முஸ்லிம்

முதல் பள்ளியை மீளப் புதுப்பித்து முழுமையாக்கிய நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே   இரண்டாம் பள்ளியையும் மீளவும் புதுப்பித்துக் கட்டினார்கள். பின்னர் அப்பள்ளியை நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்பிருந்தைப் பார்க்கிலும் விசாலமாக்கிக் கட்டினார்கள்.
 
மேற்கண்ட இரு ஆதாரங்களும்அல்லாஹ்வின் வீடு’ என்று சொல்லப்படும் கஃபதுல்லாஹ், மனித இனம் இறைவனை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது என்பதை விளக்கி நிற்கிறது. மனித இனத்தின் தொடக்கம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்எனவே, மனித இனத்தில் முதன் முதலாக இப்பள்ளிவாயிலை உருவாக்கியவர் முதல் மனிதராகத்தான் இருக்க வேண்டும்.

பூமியில் வசிப்போர் வல்லவன் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் வைக்கப்பெற்ற இவ்விறை இல்லம், ஏழாம் வானத்தில் அர்ஷுக்குக் கீழ் அமையப்பெற்றுள்ளபைதுல் மஃமூர்எனும் இறை இல்லத்திற்குக் கீழ், பூமியில் அமையப்பெற்றிருப்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

பைத்துல் மஃமூர்



பைத்துல் மஃமூர் என்பது மலக்குமார்களால் அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட பள்ளியாகும். அந்த பைத்துல் மஃமூருக்குள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள். உள்ளே சென்ற மலக்குமார்கள் மீண்டும் வெளியே வர மாட்டார்கள். மறுநாள் புதிதாக எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டே இருக்கும்.

பைத்துல் மஃமூர்என்பது கஃபாவுக்கு மேலே வானிலுள்ள வானவர்கள் தொழுமிடமாகும். அங்கே நாள் தோறும் 70,000 வானவர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதில்லை.  நூல் : புகாரி

நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்: அல்பைத்துல் மஃமூர்வானத்தில் உள்ளது. அதற்கு அழ்ழுராஹ்என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஃபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (ஏழாவது வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஃபாவின் மீதுதான் விழும். நூல் : முஃஜமுல் கபீர்  

மேற்கண்ட செய்தியில் பைத்துல் மஃமூர்என்ற பள்ளிவாசல் கஃபாவிற்கு நேராக மேல் வானத்தில் இருப்பதாகவும், எந்த அளவிற்கென்றால் அது விழுந்தால் கூட கஃபாவின் மீதுதான் விழும் அந்த அளவிற்கு நேராக உள்ளது என்று வந்துள்ளது. பைதுல் மஃமூர் அர்ஷுக்குக் கீழே உள்ளதொரு இறை இல்லமாகும் என்று ஹழ்ரத் அலி பின் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள். நூல்:தப்ஸீர் பகவி

பைத்துல் மஃமூர் என்னும் இந்த மஸ்ஜிதில்தான் இறைவன் தனது வேதமாகிய திருக்குர்ஆனை லவ்ஹுல் மஹ்பூள் என்னும் பாதுகாக்கப்பட்ட பலகையிலிருந்து ஒரு சேர ரமழான் மாதம் இறக்கினான்.  அதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இருபத்தி மூன்று வருடங்களில் இறக்கி வைக்கப்பட்டது.

ஏழாவது வானில் அர்ஷுக்குக் கீழ் உள்ள பைத்துல் மஃமூரில் ஹழ்ரத் செய்யிதுனா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாய்ந்து கொண்டிருக்க, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தில் பார்த்ததாக மிஃராஜ் சம்பவத்தைக் குறித்த நபி மொழிகளில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் அபய பூமி



وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا

எவர் அதி(மக்கா பள்ளியி)ல் நுழைகின்றாரோ அவர் அச்சம் தீர்ந்தவராகி விடுகிறார்.” ஆல இம்ரான் வசனம் 96

இது (மக்கா) வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள்வரை அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்ட புண்ணிய பூமியாகும். இது மனிதர்களினால் பரிசுத்தமாக்கப்பட்ட பூமி அல்ல. நூல்: புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள்,  ஒருவரின் கப்ரருகில் சென்று கொண்டிருக்கும் போது, இது என்னவென்று தெரியுமா? எனத் தோழர்களிடம் கேட்கிறார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே இது என்னவென்பதை அறிவார்கள் என்று தோழர்கள் கூறினார்கள். அப்போது, இதுஅபூ ரிகால்’ என்பவரின் கப்ர் என்றார்கள். அப்போது,அபூ ரிகால்’ என்பவர் யார்? என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கு, இவர் தமூத் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர், அல்லாஹ்வின் ஹரத்திலே இருந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அக்கூட்டத்தினருக்கு அல்லாஹ்வின் வேதனை இறங்கியது. எனினும் அவ்வேதனை அவரைப் பாதிக்கவில்லை. இவ்வாறு அதனுள்ளே அச்சம் தீர்ந்தவராக இருந்த அவருக்கு வெளியே வந்ததும் அல்லாஹ்வின் அந்த வேதனை அவரைத் தொட்டு விட்டது. அதனால் அவர் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நூல்: அல்-பிதாயா வந்நிஹாயா

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. அதனால் இதனைத் தாக்கி அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாத்தின் எதிரிகளிடம் இன்னும் இருந்து கொண்டே வருகிறது.

மேலும் கியாமத் நாள் நெருங்கும்போது ஒரு படை கஃபாவை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஃபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு படையினர் கஃபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!எனக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், “முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்என்று கூறினார்கள். நூல்: புகாரி

கியாமத் நாள் வரை கஃபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஃபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

நபி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். கஃபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். நூல்: புகாரி

கஃபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப்பாழ்படுத்துவார்கள். இதைப் பற்றி ஹழ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்:அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஃபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள். நூல்: புகாரி

அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட இறை இல்லமான புனித கஃபதுல்லாஹ்வையும் அங்கு வருவோரையும் பாதுகாக்க, அல்லாஹ்வின் எதிரிகளான யூதர்களின் தயவை நாடி நிற்க வேண்டிய அவசியம் அந்நாட்டின் தற்கால மன்னர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுவொரு துரதிஷ்டவசமாகும்.

மனித இனம் அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காக மண்ணில் நிர்மாணிக்கப்பட்ட முதல் இறை இல்லம் கஃபாவாகும். மனித இனத்தின் தந்தை ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் அதற்கு அடித்தளமிட்ட முதல் மனிதராகும். 
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...