புதன், 8 மே, 2019

ஷைத்தானின் சக்தி.


ஷைத்தானின் சக்தி.



மா சிவல்லாஹ்அல்லாஹ் அல்லாத அனைத்தும் அகிலங்களுக்குள் உள்ளடங்கும். அகிலங்களுக்குள்ளடங்கும் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகள் ஆகும். அந்தக் கட்டளைகள் யாவும் தாய் ஏட்டில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. அதனை இஸ்ராபீல் என்ற தூதுவர் பாதுகாத்து கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். அந்தக் கட்டளைகள் விசேட தூதுவர்களுக்கு பகிரப்பட்டுள்ளன. அந்தக் கட்டளைகளை தூதுவர்கள் பங்கு பிரித்துக் கொண்டு அவற்றினை உரிய முறையில் நிர்வகித்துக்கொண்டு வருகின்றார்கள்.
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்யாமல் அவனினால் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருகிறார்கள். என்ன நிகழ்வு என்ன நேரத்தில் நிகழவேண்டும், நிகழக்கூடாது  என்று அல்லாஹ்வின் கட்டளையில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டார்களோ அதன்பிரகாரம் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமரர்கள் அகிலங்களின் பாதுகாவலர்கள். பராமரிப் பாளர்கள். நிர்வாகிகள். அவர்களையும் அவர்களது பணிகளையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே. அடியார்களைப் பொறுத்தவரை இத்தூதுவர்கள் ஆலிமுல் கைபுகளாகவும் ஹாழிர், நாழிர்களாகவும் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனோடும் இரு தோழர்கள் இருகின்றனர். அதில் ஒருவர் அமரராகும். மற்றவர் ஷைதானாகும் என்ற திரு நபி வாக்கின் அடிப்படையில் அடியானில் நலவுகள் நிகழ்கின்ற போது அதற்குத் துணையாக தூதுவர்கள் இருப்பது போன்று அடியானில் நிகழ்கின்ற தீமைகளுக்கு ஷைத்தான் துணை நிற்கின்றான் என்பது புரிகிறது.
நலவும் கெடுதியும் அல்லாஹ்வில் நின்று முள்ளதென்றும் இவை இரண்டில் எது இடம் பெற்றாலும் அது தாய் ஏட்டில் பதிவானதாகவே இருக்கும் என்றும் யார் என்ன வேலையினைச் செய்தாலும் அதற்கான ஆற்றலை அல்லாஹ்தான் அவருக்கு வழங்குகின்றான் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இஸ்லாமியன் இருகின்றான். இதன் அடிப்படையில் இவ்விருவரும் அவரவருக்கு வழங்கப்பட்ட பணியினை புரிந்து கொண்டு வருகின்றார்கள்.
மனிதனோடு தொடர்புள்ள அமரருக்கு அல்லாஹ் வழங்கியுள்ள ஆற்றல்கள் என்னவென்பதை கடந்த தொடர்களில் கண்டு கொண்டதால் ஷைத்தான் பற்றிய சில செய்திகளை இப்பொழுது பார்ப்போம்.

இப்லீஸ் ஷைத்தான், ஜின் இனத்தின் தலைவன். ஜின்கள், ஷைத்தானின் சந்ததிகள். கடுமையான வெப்பமுடைய தீப்பிழம்பில் இருந்து இவ்வினம் படைகப்பட்டிருக்கிறது. இது மனித இனத்திற்கு முந்திய இனம். இவ்விரு இனங்களும் அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கின்றன.
தண்ணீர் மேலுள்ள சிம்மாசனத்தில் இருந்துகொண்டு ஷைத்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான். இப்லீஸுக்கு மட்டுமே மறுமை வரை வாழ அவகாசம் வழங்கப்பட்டுள்ளது மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பதைப் போன்று ஜின்களில் நல்லவர்களுமுள்ளனர் தீயவர்களுமுள்ளனர். காபிர்களுமுள்ளனர். முஸ்லிம்களுமுள்ளனர். 
மனிதனோடு சாட்டப்பட்டுள்ள அமரரின் பணி அவன் தாயின் கருவறையில் அமர்ந்தது முதல், ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவனோடு சாட்டப்பட்டுள்ள ஷைத்தானின் பணி அவன் பிறக்கும் நேரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இதனால்தான் பிறக்கும் குழந்தையின் அழுகைக்கு அவனே காரணமாகின்றான். இவ்வாறு மனிதனின் பிறப்போடு தொடங்கும் ஷைத்தானின் பணி அம்மனிதன் சாகும்வரை சென்று கொண்டிருக்கும்.
இதன் அடிப்படையில், உங்களில் ஒருவர் கொட்டாவி விடும் போது தனது கையை வாயில் வைத்து அதை மறைத்துக் கொள்ளட்டும். ஏனெனில் ஷெய்தான் நுழைகிறான். மலசல கூடம், உடலுறவு கொள்ளும் நேரம் போன்ற சந்தர்பங்களிலும் ஷைத்தான் நம்மோடு இருக்கின்றான். உண்ணும்போதும் உறங்கும்போதும் நம்மோடு அவனும்தான் இருக்கின்றான். மரண தருவாயில் இருக்கும்போதும் வருகின்றான். உள்ளத்தில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகின்றான். சகல குழப்பங்களையும் அவன்தான் உருவாக்குகின்றான். நமது ரத்தம் ஓடும் இடமெல்லாம் அவனும் ஓடுகின்றான் என்றால் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள வல்லமையை என்னவென்று கூறுவது? இவ்வாறு என்னதான் ஆற்றல்கள் இவனிடம் காணப்பட்டாலும் இவனை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் சொல்லப்படுகின்ற நாமங்களினால் அழைத்துவிடக்கூடாது.

               இரு இனங்களுக்குமான இறைத்தூதர்.      

மனித இனத்தினைவிட முந்திப் படைக்கப்பட்ட ஜின் இனமும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதெற்கென்று அல்லாஹ்வினால் படைக்கப்பட்டிருக்கிறதென்று அல்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும்  இவ்வினத்திற்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டார்களா? இல்லையா? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் பெருமக்களிடத்தில் நிலவிக்கொண்டிருக்கின்றன.
எனினும் அருமைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனு ஜின் ஆகிய இரு வர்க்கத்திற்கும் தூதராக இருக்கின்றார்கள் என்பதில் யாரிடமும் மாறுபட்ட கருத்து இல்லை. அவ்வாறே செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அமரர்களை விடவும் அதி சிறந்தவராக இருக்கின்றார்கள். எனவே அமரர்களையும் ஜின்களையும்விட படித்தரம் குறைந்தவர்களாக அதி சிறப்பான ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறப்புக்கள் பற்றி சுருக்கமாக இவ்விடத்தில் சொல்வதாக இருந்தால், ஏழு வானங்களும் பூமிகளும் கடதாசிகளாக்கி கடல்களை மையாக்கி மரங்களெல்லாம் பேனாவாக்கி வானம் பூமிகளிலுள்ள மனு ஜிங்களுடன் அமரர்களும் ஒன்றிணைந்து எழுதினாலும் கடதாசிகளும் கடல்களும் மரங்களும் தீர்ந்து எழுதுபவர்கள் களைத்துப்போய் விடுவார்களே தவிர ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முடிகளில் ஒரு முடியின் புகழ் முடிந்துவிடாது. காரணம் அண்ணலாரின் அகமியத்தினை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
அர்ஷ் குர்சி லவ்ஹு கலம் சுவனம் கஅபா சகலதைவிடவும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உயர்வானவர்கள். காரணம், இவையாவும் இறுதி நபி ஸல்லல்ல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் உம்மத்துக்களாகும். பார்க்க: இஷ்குர் ரசூலும் தேவபந்த் உலமாக்களும் 325-327.


கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...