வெள்ளி, 18 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லிம்களின் பூர்விக குடியிருப்பு வரலாறும் கலாசாரமும்.



بسم الله الرحمن الرحيم

அன்பார்ந்த உலமாக்களே! புத்திஜீவிகளே! மாணவர்களே! பொதுமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாறு.

 கட்டம் 01



இஸ்லாத்தின் பார்வையில் உலகத்திலுள்ள ஒட்டு மொத்த மனித இனமும் ஆதம் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவரின் வழித்தோன்றல்களாகும். இவ்விருவரும் உருவ மற்ற ஓரிறைக் கொள்கையுடையவர்களாகும். இதில் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இலங்கை யராகவும் ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராகவும் இருக் கின்றார்கள். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளைகளிடத்தில் காலப்போக்கில் ஓரிறைக் கொள்கை ஒழிக்கப்பட்டு உருவ வழிபாடென்னும் சிலை வணக்கம் தோற்றம் பெறு கிறது. நெருப்பு வணக்கமும் உருவாகிறது. இதனால் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) என்ற ஒருவர் தூதுவராக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்......



கட்டம் 02

இவர், ஓரிறைவனை வணங்குமாறு சுமார் 950 வருடங்கள் உலக மக்களை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவரை ஒருசிலர்தான் ஏற்றுக்கொண்டனர். உருவ வழிபாட்டில் இருந்து அவரின் புதல்வரும் விடுபடவில்லையென்றால் எந்தளவுக்கு அன்றிருந்த மக்கள் மத்தியில் அவ்வழிபாடு புரையோடிப்போய் இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவரை விசுவாசித்தவர்களைத் தவிரவுள்ள முழு மனித இனமும் பாரிய வெள்ளப் பிரளயத்தினால் அழிக்கப்படுகின்றனர். இந்தப் பிரளயத்தினை அடுத்து ஆதம் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களினூடாக வெளிப்பட்ட மனித இனம், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிள்ளைகளின் வாரிசுகளாக மாற்றம் பெற்றது. இது அரப் தேசத்தில் இருந்து புறப்பட்டது.
முதல் கட்ட மனித பெருக்கத்திற்கு நம் நாடான இலங்கையும் சவூதி அரேபியாவும் சம்பந்தம் இருப்பதை மறுக்க முடியாததுபோன்று இரண்டாம் கட்ட மனித வளர்ச்சிக்கு அரப் நாடு ஒன்றுதான் அதற்கு சம்பந்தப்பட்டதென்பதை மறுக்க முடியாதுள்ளது. ஆக இன்றைய மொத்த மனித இனம் இஸ்லாமியர்களுக்குப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது அரப் தேசத்தில் இருந்து உருவானவர்கள் என்பதுமே யதார்த்தமாகும்.


 கட்டம் 03


இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் யக்ஷ, நாக, தேவ இனத்தினர் வாழ்ந்து வந்ததாக இலங்கையின் வரலாற்றுத் தொகுப்பு நூலான மஹாவம்சம் கூறுகிறது. இவர்கள் பிறநாட்டில் இருந்து வந்தவர்கள். இந்நாட்டின் பழங்குடி மக்களாக கருதப்படுகின்ற இவ்வினத்தினர்கள்தான் காலப்போக்கில் தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்றியுள்ளனர். ஆக இந்த நாட்டின் இன்றைய முழு மனிதர்கள் மட்டுமல்லாது மதங்களும் பிற நாட்டில் இருந்து வந்தவைகளே.
இலங்கை நாட்டின் தொன்மையான குடியிருப்புக்களில் புத்தள மாவட்டமும் ஒன்றாகும். இலங்கையில் பௌத்த மதத்திற்கு வித்திட்ட விஜயனின் வருகைக்கு முன்னரே நாகரிகம் நிறைந்து கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பொன்று இப்பகுதியில் நிலவியிருக்கிறது. இது யக்ஷயர்களின் தேசம் என்று சொல்லப்படுமளவுக்கு விஜயனின் வருகைக்கு முன்னர் யக்ஷயர்கள் ஆட்சி இப்பிரதேசங்களில் இடம் பெற்றதாக வரலாறுகள் சொல்கிறது. விஜயனின் ஒழுக்கமற்ற செயல்பாட்டினால் அவன் அவனது தந்தையினால் நாடுகடத்தப்பட்டிருந்தான். இவனே இலங்கையில் புத்தமதத்தை தோற்றுவித்தான்.


விஜயன் புத்தளக் கரையோரத்தினை கி.மு.544ல் வந்தடைகின்றான். ஆனால் கி.மு.326-327களில் இலங்கையின் புவியியல் படத்தை வரைந்த கிரேக்க மாலுமியான ஓனோஸ் கிறிட்டோஸ் இன்றைய புத்தளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பாகத்துடன் தொடர்பான பகுதிகளில் “சோனாள்கள்” குடியேற்றம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விஜயன் இலங்கையில் பிரவேசிக்கும் முன்னர் இது நடைபெற்றுள்ளது.

அநுராதபுர நகரம் பராக்கிரமபாகு காலத்தில் (கி.மு.437-407) யோனகர்களுக்கென தனியான பகுதி என ஒதுக்கப்பட்டிருந்ததாக இலக்கியத் தரவுகள் குறிப்பிடுகிறன. சிங்களவர்கள் முஸ்லிம்களை “யொன்னு” என்றும் தமிழர்கள் “யோனகர்” என்றும் அழைத்துள்ளனர். இதுவே “சோனகர்” என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள்தான் அன்றைய யக்ஷயர்கள். இன்றைய இஸ்லாமியர்கள்.

தெதுரு ஓயா, சோனா நதி அல்லது அரேபியர் நதி என்று கூறப்படுகிறது. தெதுரு ஓயாவிற்கு வடபாகத்தில் சோனாள்கள் வாழ்ந்துள்ளனர்.

இலங்கையின் புத்தளம் பிரதேசத்தில் விஜயனும் அவனது தோழர்களும் கரையொதுங்கிய சந்தர்ப்பத்தில் இப்பிரதேசத்தில் நல்லாட்சி புரிந்துவந்த யோனர்களான யக்ஷயர்கள் சோனகர்கள் என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர்.

கி.மு. 985-932 காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவர் நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். அல்லாஹ் காற்றை இவர்களின் கைவசமாக்கினான். விலங்கினங்கள், பூச்சி புழுக்கள் ஆகியவற்றின் மொழிகளையெல்லாம் இவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவற்றையூம் இவர்களின் ஆதிபத்தியத்தின் கீழ் அல்லாஹ் ஆக்கினான். ஜின்களும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது.

இவர் முழு உலகத்தினையும் ஆட்சி செய்திருக்கின்றார் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் இவர் வந்திருக்கவேண்டும். அவ்வாறு இலங்கைக்கு வந்தபோது சாம்பிராணி, மாணிக்கக்கற்கள், கருங்காலி, யானைத் தந்தம், மயில் முதலியவற்றை இங்கிருந்து பெற்றுச் சென்றுள்ளனர்.

காலி பழமை மிக்கதொரு நகர். இலங்கையில் பழைய தலை நகரங்களான அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, யாப்பாகுவ, சீகிரிய ஆகிய இடங்களைவிட ஆயிரம் வருடங்கள் பழைமை மிக்க நகரம். இங்கிருந்துதான் இலங்கையின் வரலாறு ஆரம்பிக்கின்றது.

நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவஉகள் ஜெரூஸலத்தில் கட்டிய அரண்மனைக்கு காலி துறை முகத்தினூடாக அரேபிய வணிகர்கள் பெறுமதிமிக்க இரத்தினக் கற்கள் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுத் தகவல் 13-08-1989 அன்று காலி தலாப்பிடியா முஹ்யித்தின் ஜும்ஆ மஸ்ஜிதில் வெளியிடப்பட்ட சோலை மலர் சுமந்துள்ளதுடன் புத்தளம் முஸ்லிம்கள் வரலாறு, காத்தான்குடி வரலாறு போன்ற பல வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.

இந்தியா கேரள மலையாளக் கரைப் பகுதிகளில் நபியுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக மானா மக்கீன் என்பவர் குறிப்பிடுகிறார். பார்க்க: வரலாற்றில் இலங்கை கண்ட குமரி பக்கம் 19.


இலங்கையில் அரேபியர்களுடைய வர்த்தகத் தொடர்பு, சிங்கள மக்களுடன் கொண்டிருந்த அவர்களது உறவு, மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கு பரவலாக இலங்கையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் காரணமாகத்தான் டெனன்ட் (கிறிஸ்துவ சக்தியொன்று  இலங்கைக்கு வராதிருந்தால் பிரித்தானியர் கைக்குள் அது வந்திருக்காது அது அரேபியர்களால் ஆளப்படும் ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும்) என்று குறிப்பிடுகிறார். பார்க்க: காத்தான்குடி வரலாறு பக்கம் 11.
இது இந்நாட்டு முஸ்லீம்களின் குடியிருப்புப் பூர்வீக வரலாறாகும். இந்த வரலாறு இன்று நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? அவ்வாறு தெரிந்து கொண்டவர்களில் இதனை ஏற்றுக்கொண்டவர்களைவிட நிராகரித்து பொய்பிப்பவர்கள்தான் அநேகர்களாக இருக்கின்றனர்.
தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...