சனி, 12 ஜனவரி, 2019

நல்லோர்களின் அருளினால்தான் உலகம் நிலைத்திருக்கிறது

நல்லோர்களின் அருளினால்தான் உலகம் நிலைத்திருக்கிறது


பால் குடிக்கும் குழந்தைகளும் மேய்கின்ற பிராணிகளும் வணக்கத்தில் ஈடுபடும் ஷெய்குமார்களும் இல்லையென்றால் அல்லாஹ்வின் தண்டனை கொட்டோ கொட்டென்று கொட்டிடும் என்றார்கள் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.


هل تنصرون وترزقون إلا بضعافكم بدعائهم وصلاتهم وإخلاصهم


“உங்களில் பலவீனமானவர்களின் பிரார்த்தனையின் அருளினால்தான் உங்களுக்கு உணவு வழங்கப்படுவதுடன் வெற்றியும் கிடைக்கின்றெதென்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” பார்க்க: புகாரி


إنما ينصر الله هذه الأمة بضعيفها بدعوتهم وصلاتهم


“இந்த உம்மத்தின் பலவீனமானவர்களின் தொழுகை மற்றும் பிரார்த்தனையின் அருளினால்தான் இந்த உம்மத்தினருக்கு அல்லாஹ் வெற்றியினை வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்ற ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருள் வாக்கு நசாயியில் பதிவாகியுள்ளது.


لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما. الفتح 25


“நம்பிக்கையாளர்கள் மக்காவில் இருந்து நீங்கியிருந்தால் அவர்களில் நிராகரித்தோரை நோவினை தரும் வேதனையால் நாம் தண்டித்திருப்போம்.”அல்ஃபத்ஹ் வசனம் 25

ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. البقرة 251


“அல்லாஹ் மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் தடுக்காது இருந்தால் இந்த பூமி சீர் கெட்டிருக்கும். எனினும் அல்லாஹ் அகிலத்தார் மீது அருள் பாளிப்பவனாகும்.” அல்பகரா 251

இவ்வாறு நல்லோர்களின் பொருட்டினால்தான் இந்த உலகம் தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். இது இந்த உம்மத் பெற்றுக் கொண்ட வரமாகும். அந்த வரமானது வள்ளல் நபி முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருளே அன்றி வேறில்லை.

இந்த உலகத்தில் கூடுதலான சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர்கள் உலுல் அஸ்ம் எனப்படும் ஐந்து நபிமார்களுமாகும். நபிமார்களான இப்ராஹீம், மூசா,ஈசாஇ நூஹ் ஆகிய நால்வருடன் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் ஆகியோரை உலுல் அஸ்ம் எனப்படும். இவர்களில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிற நால்வரையும் விடக் கூடுதலான சோதனைச் சந்தித்தவர்களாகும். அவ்வாறிருந்தபோதும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர மற்ற நால்வரும் சோதனையும் வேதனையும் அளவு மீறிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவரவர் சமூக மக்களுக்கு எதிராக பின்வருமாறு பிரார்த்தனை புரிந்ததாகஅல்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது.


நபிய்யுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை




فدعا ربه أني مغلوب فانتصر. القمر10

“நிச்சயாமாக நான் தோற்கடிக்கப்பட்டவன். எனவே எனக்கு உதவி புரிவாயாக! என தனது இரட்சகனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.” அல் கமா வசனம் 10

وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا. نوح 29

“எனது இரட்சகனே! நிராகரிப்பாளர்களில் எவரையும் நீ இப்பூமியில் வசிக்கவிட்டு விடாதே! என்று நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.”நூஹ் வசனம் 29

நபிய்யூல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை


ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. يونس 88

“எங்கள் இரட்சகனே! அவர்களின் செல்வங்களை அழித்து அவர்களது உள்ளங்களைக் கடினமாக்குவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என மூசா (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) கூறினார்.” யூனுஸ் வசனம் 88

நபிய்யுல்லாஹ் தாவூத் மற்றும் ஈசா அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை



لعن الذين كفروا من بني اسرائيل على لسان داوود وعيسى ابن مريم ذالكبما عصوا وكانوا يعتدون. المائدة 78

“இஸ்ராயீலின் சந்ததிகளில் நிராகரித்தோர், தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈசா ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் மாறு செய்து வரம்பு மீறிக்கொண்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.” 
அல்மாயிதா 78

நபிய்யுல்லாஹ் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் லைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை


فقال لهم رسول الله ناقة الله فسقياها فكذبوه فعروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها. الشمس 13-14

“அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தையூம் அது தண்ணீர் அருந்துவதையும் (விட்டு விடுங்கள்) என்று கூறினார். அவர்கள அவரைப்  பொய்ப்பித்து அதனை அறுத்து விட்டனர் எனவே அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களது இரட்சகன் அவர்கள் மீது வேதனையை இறக்கி வைத்து அவர்களைப் பூண்டோடு அழித்து (தரை) மட்டமாக்கினான்.”

நபிய்யுல்லாஹ் இப்ராஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை



وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير.

“என் இரட்சகனே! இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக!மேலும் இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றாரோ அவர்களுக்குக் கனிவர்க்கங்களில் இருந்து உணவளிப்பாயாக! என்று இப்ராஹீம் பிரார்த்தனை புரிந்ததை நினைத்துப் பாருங்கள்.”அல்பகரா 126

நபிய்யுல்லாஹ்  லூத் அலைஹிஸ்ஸலாம் லைஹிமஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை 


قال رب انصرني على القوم المفسدين. العنكبوت 30

“எனது இரட்சகனே! குழப்பம் விளைவிக்கும் இக்கூட்டத்தாருக்கெதிராக நீ எனக்கு உதவி செய்வாயாக! என அவர் கூறினார்.”அல்அன்கபூத் 30

இவ்வாறு மேற்சொன்ன நபிமார்களெல்லாம் அவரவர் சமூக மக்களின் தொல்லைகள் எல்லை மீறிச் சென்றபோது அம்மக்களுக்கெதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். அதனால் அச்சமூக மக்கள் அழிந்துபோனார்கள்.

நபிமார்களில் வேறெவரும் பெற்றிடாத வேதனைகளையூம் சோதனைகளையும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில்,

يا رسول الله صلى الله عليه وآله وسلم الا تلعن بما أتوا إليك؟ فقال لم أبعث لعانا إنما بعثت رحمة يقول الله : وما ارسلناك إلا رحمة للعالمين.

“அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கெதிராக நீங்கள் பிரார்த்தனை புரியக்கூடாதா? என்று தோழர்கள் கேட்பார்கள். அப்பொழுது, நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை. நிச்சயமாக நான் அருளாகவே அன்றி அனுப்பி வைக்கப்படவில்லையென்று அல்லாஹ் சொல்வதாகச் சொல்வார்கள்.”

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தன்னுடைய சமூக மக்களின் எதிர்கால நலனுக்காக பிரார்த்தனை புரிந்திருக்கிறார்கள். பசியால் எனது சமூகத்தை அழித்திடாதே! அவ்வாறே யூத நசாராக்களை அவர்களுக்கு எதிராக சாட்டி விடாதே என்றும் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். அந்தவொரு பிரார்த்தனையின் அருளால்தான் இந்த சமூகம் இதுவரை அழியாமல் இருந்து கொண்டிருக்கிறது. 

وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. الأنفال 33

“நபியே! நீங்கள் அவர்களுடன் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. மேலும் அவர்கள் பாவமன்னிப்புக் கோரும் நிலையிலும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை.”என அல்லாஹ் வாக்குறுதியளித்து விட்டான். அல்அன்பால் 33

அன்பான சகோதரர்களே!

கடந்த காலங்களை விட அண்மைக் காலமாக நாம் ஏராளமான பிரச்சினைகளையும் அழிவுகளையும் சந்தித்து வருவதைக் காண முடிகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தம்முடன் இருக்கின்றார்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை கடந்த காலத்து மக்களிடம் காணப்பட்டது அதன் பொருட்டினால் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நம்முடன் இல்லை. அவ்வாறு இருப்பதாக நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனையாகும் என்ற மார்க்க விரோத கருத்துக்கள் வெளிப்பட்டதையடுத்து அல்லாஹ்வின் பாதுகாப்பு நம்மை விட்டும் தூரமாகி விட்டது. 

இந்த உலகம் முழுமையாக அழிய வேண்டுமாக இருந்தால் இங்கு அல்லாஹ்வின் அருள் இறங்குவதில் தடங்கள் ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் அருள் எப்பொழுது தடைப்பட்டுப்போகுமோ அப்பொழுது இந்த உலகம் அழிந்து விடும்.

அல்லாஹ்வின் அருள் தடைப்பட வேண்டுமாக இருந்தால் எந்தெந்த வாயில் வழியாக அவனது அருள் வந்துகொண்டிருக்குமோ அவ்வழிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதற்கான பணியைத்தான் தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, கர்ணி போன்ற வழி கெட்ட கூட்டங்கள் மார்க்கப்பணி என்ற பொய்யான லேபலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அல்லாஹ்வின் அருள் வாயில்கள் இழுத்து மூடப்பட்டு இந்த உலகம் அழிந்து போவதற்குரிய பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...