ஞாயிறு, 20 ஜனவரி, 2019

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக குடியிருப்பு வரலாற்றுத் தொடர்....

இலங்கையின் முஸ்லிம் மன்னர்.


இரண்டாவது புவனேகபாகுவின் மகன் வத்ஹிமி கலேபண்டார இலங்கையில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னனாவார் மன்னன் புவனேகபாகு முஸ்லிம் பெண் ஒருத்தியை மணம் செய்திருந்தார் என்பது பிரபலமான வரலாற்றுச் செய்தி. வத்ஹிமி கலேபண்டாரவின் ஆட்சி கீர்த்தியற்ற கலவரச் சூழல் கொண்ட குறுகிய கால ஆட்சியாக முடிவுற்றது. அரச மந்திரிப் பிரதானிகளும் பிக்குமார்களும் இவர் அரசனானதை விரும்பவில்லை.

மூன்று வருடங்கள் அல்லது ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட ஒரு சிறிய காலப்பகுதியில் நடந்த அவரது ஆட்சின்போது குருனாகல் எத்துக்கள் மலை உச்சியில் இருந்து அவர் வீழ்த்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார் இது பிக்குமார்களின் சதித்திட்டத்தின் அடிப்படையில் அரங்கேறியது.

வத்ஹிமி வீழ்ந்து இறந்த மலையடிவாரத்தில் முஸ்லிம்களின் சமய முறைப்படி அவர் அடக்கம் செய்யப்பட்டார். கலேபண்டார அவ்லியா என்ற பெயரில் அவரது அடக்கஸ்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. அவ்வடக்கஸ்தலம் இன்று வரை முஸ்லிம் குடும்பம் ஒன்றின் தொடர்ச்சியான பராமரிப்பில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமன்றி பெருந்தொகையான சிங்கள மக்களும் இங்கு வந்து பிராHத்தனைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

“வத்ஹிமி கலேபண்டார” போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சிங்கள அரச வம்ச பின்னணிக்குரிய பட்டப்பெயர்களாகும். வத்ஹிமி அரசரின் இயற் பெயர் குறைஷான் இஸ்மாயீல் ஆகும். இவரின் தாய் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமும் எத்துக்கள் மலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. தெல்லியாக்கோனை என்ற பாரம்பரிய முஸ்லிம் கிராமத்தின் மத்தியில் இது காணப்படுகிறது. இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் “ஒற்றை மீசான் கபுறடி” என்று அழைக்கப்படுவதுடன் அதுவும் ஒரு தர்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பேருவளை வத்ஹிமி ராஜாவின் மகளாகும்.

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...