ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

“நூர்”என்பதன் பொருள்.


நூர் என்பதன் பொருள்


நூர் என்ற அரபு மொழிவார்த்தைக்கு ஒளி என்று தமிழில் பொருள் கூறுகின்றோம்அதற்காக அந்த ஒளியினை மனிதனானவன் தன்னுடைய சாதாரண புலன்களுக்குப் புலப்படுகின்ற ஒளியென்று எண்ணிவிடக் கூடாதுஸல்லல்ல்லாஹுஅலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நூரின் யதார்த்தத்தினை அல்லாஹ் ஒருவனே அறிவான் என்று அல்லாமா ஜவ்பர் பின் அல் பர்சன்ஜி அவர்கள் கூறிய கருத்தினை அஷ்ஷைக் அபூபக்ர் அஹ்மத் காந்தபூரி  (ஸகாபதுஸ்சுன்னிய்யாகேரளா) அவர்கள் அல் அவாயிதுல் வஜ்திய்யாஎன்ற நூலின் பக்கம் 1-5ல் பதிவு செய்துள்ளார்கள்.
ஸல்லல்ல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் அதன்விளக்கம் என்னஎன்ற கேள்விக்கு ஹிதாயத் என்று பொருள் கூறப் படுகிறது இவ்வாறு பொருள் கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஹிதாயத் என்றால் என்னஎன்று மீண்டும் கேட்டால் நேர்வழி என்று அதற்குப்பொருள் கூறுவோம்அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூராக இருக்கின்றார்கள் என்றால் நேர்வழிகாட்டும் ஒருவராக இருக்கின்றார்கள் என்பது இதற்கான விளக்கமாகும் என்று சொல்வோம்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்நேர்வழி காட்டுகின்றதாக இருக்கிறதென்று நம்மிடம் உங்களில் யாராவது கேட்பீர்களாக இருந்தால் அவ்வாறு கேட்பவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹிவசல்லம் அவர்களின் எந்தெந்த விடயங்கள் நூராக அதாவது ஹிதாயத்-நேர்வழி காட்டவில்லை என்று சொல்லித் தருமாறு நாம் அவரிடம் திருப்பிக் கேட்போம்.
நூர் என்பதற்குச் சொல்லப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லமவர்களின் பேச்சு மட்டுமல்ல மூச்சும் நூர்தான்மனைவிமக்கள் மட்டுமல்ல தோழர்களும் நூர்தான்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான சிரசில் அமரும்பாக்கியம் பெற்ற தொப்பி,தலைப்பாகை முதல்பாதம் சுமக்கும் பாக்கியம் பெற்ற பாதணியும் நூர்தான்.
அவ்வாறே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் முபாரக்கான திரு மேனியில் இருந்து வெளியேறிய வியர்வைகுருதி முதல்சகலதும் நூர்தான்இதையே தான் மனித வடிவத்தில் வெளியான அல்லாஹ்வுடைய நூரி (ஹிதாயத்தி) ன் முழு வடிவம் என்கின்றோம். நூரினால் படைக்கப்பட்டதாகப் பேசினோம் அந்தநூருக்காகவே அகிலங்களெல்லாம் அமைக்கப்பட்டதென்று அறிவித்தோம்அவர்களின் நூரின்றி வேறில்லை என்கின்றோம். இது மேற் கூறிய நபி மொழியின் சாரமாகும்.
(அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர் ) தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...