அல் குர்ஆனும் நூர் அண்ணலாரும் நூர்.
அல் குர்ஆனை நாம் நமது கண்களினால் பகலிலும் பார்க்கின்றோம். இரவிலும்பார்க்கின்றோம். கரங்களினால் பிடிக்கின்றோம். ஓதுகின்றோம். எழுதுகின்றோம். அச்சிடுகின்றோம். அழிக்கின்றோம். எரிக்கின்றோம். கரைக்கின்றோம். கரைத்துக்குடிக்கின்றோம். இத்தனை கருமங்களையும் அல் குர் ஆனில் புரிந்து கொண்ட பிறகும் அல் குர் ஆனை இஸ்லாமியர்களான நாமனைவரும் கருத்து முரண்பாடுகள் கடந்து நூர் என்றே சொல்கின்றோம். ஆனாலும்கூட அதில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதை நாம் கண்டதில்லையே!
நாம் அல் குர் ஆனில் இருந்து பிரகாசம் வெளிப்பட்டதைக் காணவில்லை என்ற காரணத்திற்காக அது நூர் இல்லையென்று சொல்ல முடியுமா?.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தார்கள். திருமணம் செய்துள்ளார்கள். குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். உண்ணுவார்கள். உறங்குவார்கள். ஓடியாடிவிளையாடியுள்ளார்கள். யுத்தங்களில் காயமுற்று ரத்தம் சிந்தியுள்ளார்கள். சுகவீனம் அடைந்துள்ளார்கள். மரணத்தினை தழுவியுள்ளார்கள். குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதரே தவிர நூர் அல்ல வென்று குற்றம் சுமத்து கின்றவர்கள் மேற் கூறிய காரணங்களைக் கூறி அல் குர் ஆன் நூர் என்பதை ஏன் மறுக்க வில்லை?.
தொடரும்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக