ஞாயிறு, 7 ஜூலை, 2019

உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்,


உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்.



ولا تطع من أغفلنا قلبه

யாருடைய இருதயங்களை நாம் இருட்டாக்கி வைத்து விட்டோமோ அவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.” (அல்குர்ஆன் )

எனவே இதயம் இருண்டவர்களைப் பின்பற்றாதீர்கள். பொருளீட்டளில் சந்தேகம் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் எவர்களையெல்லாம் இதய சுத்தியுள்ளவர்கள் என்று புகழ்ந்து பாராட்டினார்களோ அவர்களை வழிப்படுங்கள்.

எனது சொத்துக்களில் ஒரு சதமும் சந்தேகத்திற்கிடமானவை இல்லையென்று உத்தரவாதமளித்த உத்தமப் பெருமக்களான உண்மைக்குண்மையான இமாம்கள், சூபியாக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் பின்பற்றுங்கள். அவ்வாறானவர்களின் அறிவுரைகளைத்தான் அடியேன் இப்பிரதியில் பதித்துள்ளேன்.

கிராமங்களுக்கெல்லாம் அன்னை.


அல்லாஹ்வின் இல்லமான புனித கஃபா பூமியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதை இன்றைய நவீன அறிவியல் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் மக்காவுக்குப் பெயர் சூட்டியுள்ளது. இது பூமியின் அடித்தளமாகும். இங்கிருந்தான் பூமி துவக்கம் பெற்றதென்று இமாம் ராஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  இது பூமியின் முதல் தளமாகும். கடலினால் சூழப்பட்டிருந்த இந்த பூமி மக்காவில் இருந்துதான் வெளிப்படத் துவங்கியுள்ளது.


دحيت الأرض من مكة وأول من طاف بالبيت الملائكة

மக்காவில் இருந்து பூமி வெளிப்படுத்தப்பட்டது. அல்லாஹ்வின் இவ்வில்லத்தினை அமரர்கள் முதன் முதலில் தவாஃப் செய்தார்கள்என்று தூய நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (தப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தப்சீர் தபரீ, அக்பாறு மக்கா)

நிச்சயமாக மனிதர்களுக்கு முதன்மையாக வைக்கப்பெற்ற ஆலயம் மக்காவில் இருப்பதுதான். அது பாக்கியமுடையதாகவும் உலகத்தாருக்கு நேர் வழிகாட்டியாகவும் இருக்கிறது.” (அல் பகரா 95)

புனித மிகு ஆலயமான கஃபாவினை மனிதர்களுக்கு முன் அமரர்கள் தவாஃப் செய்துள்ளனர். இதற்குப்பின் மனிதர்களில் முதன் முதலில் தவாஃப் செய்ய அடித்தளமிட்டவர் முதல் மனிதர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். நபியுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்லாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முற்றிலும் சிதைந்து போன இந்த ஆலயத்தினை மீண்டும் நபியுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனரமைத்தார்கள்.

இந்த ஆலயத்தினை சகல நபிமார்களும் தரிசித்துள்ளனர். இதில் பல நபிமார்களின் அடக்கஸ்தலங்களும் இருக்கின்றன. எனினும் இம்மண்ணில் எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த நபியும் பிறக்கவும் இல்லை. இங்கிருந்து நேர் வழிக்கான அழைப்பிதனை சமூகத்திற்கு வேறெவரும் விடுக்கவும் இல்லை. எனவே இதில் பாக்கியமும் நேர் வழியும் இருப்பதாக அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையே இப்பூமி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அகிலங்களின் அடிப்படை.


புனித மக்கா முகர்ரமாவினை உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் சொன்னதுபோல் அண்ணல் நபி முஜ்தபா ஸல் லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை உம்மு நபிஎன்று சொல்வதையும், அவ்வாறே அண்ணலவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தின் முழுத் தத்துவங்களையும் உள்ளடக்கிய சூரத்துல் ஃபாத்திஹாவினையும் உம்முல் குர்ஆன்என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

எனவே மக்கமா நகர்  பூமிகளுக்கு அடித்தளமாகவும் சூரத்துல் பாத்திஹா அல்குர் ஆனுக்கு அடித்தளமாகவும் இருப்பது போன்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கின்றார்கள். இல்லையில்லை அகிலங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்றார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களில் இருந்தும்தான் அகிலங்களெல்லாம் அகண்டு விரிந்து சென்ற தென்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை இருக்கிறது. உடலும் உள்ளமும் ஊனமுற்று உலா வருகின்றவர்களுக்கு இவ்வுண்மை எவ்வாறு புரியப்போகின்றது?.

மனிதர்களுக்கு முதன்மைப்படுத்தப்பட்ட ஆலயமாக கஃபா இருப்பதுபோன்று அந்த கஃபாவினை முன்னோக்கி அல்லாஹ்வினை வணங்கிடும் முதன்மை மனிதராக மன்னர்முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அடையாளப்படுத்தி வைத்தனூடாக அகிலங்களுக் கெல்லாம் முதன்மையானவராக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவலினை அல்லாஹ் அறிவித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அகம் தெளிந்தவர்கள் அறிவார்கள்.

பாக்கியமும் உலகத்தாருக்கான நேர்வழியும் கஃபாவில் இருக்கின்றதென்றால் அந்த பாக்கியமும் நேர் வழியும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினூடாகத்தான் வெளிப்படுத்தப்பட்டது. உம்முல் குராவில் உம்மு நபி உதயமான பின்னர்தான் அதன் உயர்வு வானளாவ உயர்ந்தும் போனது.

அல்அமீனான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவில் உதயமாக இருக்கின்றார்கள் என்பதற்காகவே அது பலதுல் அமீனாகஅறிமுகப்படுத்தப்பட்டது.


தொடரும்.....

1 கருத்து:

  1. Play Blackjack in the Park at aprcasino.com
    Blackjack is the most popular casino game in the world! Learn all about the rules of blackjack and how to play. 카지노 꽁머니 사이트 Experience the thrill of winning!

    பதிலளிநீக்கு

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...