செவ்வாய், 25 ஜூன், 2019

கலிமாவின் பொருள்...........


கலிமாவின் பொருள்




லா இலாஹ இல்லல்லாஹ் என்பது திரு மறை வசனமாகும். இதற்கு கலிமதுன் தய்யிபதுன் என்றும் கலிமதுத் தவ்ஹீத் என்றும் சொல்லப்படும். இது எல்லா நபிமார்களும் சொன்ன வார்த்தையயுமகும். அல்லாஹ் அல்லாத இலாஹே இல்லை என்பது இதற்கான நேரடிக் கருத்தாகும். அதாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தவொரு இலாஹும் இல்லை என்பது இந்தக் கலிமாவின் விளக்கமாகும்.

லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் அல்லாத எந்தவொரு இலாஹும் இல்லை என்று அல்குர் ஆனில் கூறப்பட்டிருப்பது போல

لاإله إلا هو

அவனல்லாத இலாஹில்லை

ما لكم من إله غيره

அவனல்லாத இலாஹு உங்களுக்கில்லை

من إله غيره

அல்லாஹ் அல்லாத இலாஹு யார்?

أإله مع الله

என்ன? அல்லாஹ்வுடன் வேறு இலாஹ் உண்டா?

لا إله إلا أنت

உன்னைத் தவிர வேறு இலாஹில்லை

لاإله إلا أنا

என்னல்லாத இலாஹி;லை

لا إله غيرك

உன்னல்லாத இலாஹில்லை

أم لهم إله غير الله
அல்லாஹ் அல்லாத இலாஹ் அவHகளுக்கு உண்டா

இவ்வாறு இன்னும் பல இடங்களில் அல்லாஹ் அல்லாத இலாஹே இல்லை என்று அல்குர்ஆனும் அல்ஹதீதும் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

 இலாஹுன் என்றால் என்ன?

அலிஹ என்றால் வணங்கினான் என்பது மொழி அர்த்தமாகும். எனவே விக்ரகங்கள் வணக்கத்திற்கு தகுதியானவைகள் எனக் கருதி அவர்களாகவே அவற்றை இலாஹுகளாக (வணங்கும் பொருட்களாக) எடுத்துக் கொண்டார்கள் என்று அஸ்ஸிஹாஹ் என்ற நூலில் ஜௌஹரி  என்பவர் குறிப்பிடுகிறார்.

ஒரு பொருள் எப்பொழுது வணங்கப்படுமோ அப்பொழுது அந்தப்  பொருள் இலாஹாக ஆகிவிடும். வணங்கப்படும் அந்தப் பொருள் வணங்குபவருக்கு உணவளிக்கும். அவரைப் படைத்துப் பரிபாலிக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் வந்து விடும் என்று தஹ்தீபுல் லுஙா என்பதில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ் ஒருவனே இலாஹ் ஆகும். அவனல்லாதவற்றை எவர் இலாஹாக எடுத்துக் கொள்கிறாரோ அவரிடம் அது வணங்கப்படுவதற்கு தகுதி பெற்ற பொருளாகவே அவர் காண்கின்றார் என இப்னு மன்ழுர் குறிப்பிடுகிறார்.

الإله: معناه المعبود أو المستحق للألوهية والعبادة

வணங்கப்படுபவன். அல்லது வணக்கத்திற்கு அருகதையானவன் என்பது அதன் பொருளாகும் என இமாமுனா பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்-அஸ்மாயி வஸ்ஸிபாதி என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இமாம்களான ஹாகிம், இப்னு ஹஜர் ஆகியோரும் இதே கருத்தினை ஆதரிக்கின்றனர்.

الإله هو المعبود سواء عبد بحق أو بباطل ثم غلب فى عرف الشرع على المعبود بالحق

உண்மையாக அல்லது பொய்யாக வணங்கப்படுவதற்கு இலாஹுன் எனப்படும். பின்னர் மார்க்கத்தில் உண்மையில் வணங்கப்படுபவனுக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று இமாமுனா ராஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தப்சீரில் குறிப்பிடுகிறார்கள்.

كل ما اتخذ معبودا بحق أو بغير حق

உண்மையாக அல்லது பொய்யாக எதுவெல்லாம் வணங்கப்படுமோ அதற்கு இலாஹுன் என்று சொல்லப்படும் என அரப் மொழிக்கான அகராதிகள் கூறுகிறது.

மனு, ஜின்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லைஎன்ற திருமறை வசனத்திற்கு என்னை அறிவதற்காகவே  அன்றிப் படைக்கப்படவில்லையென்றும் பொருள் கூறப்படுகிறது. அதாவது மனு ஜின்களால் வணங்கப்படும் ஒன்று அது வணக்கத்திற்கு தகுதி பெற்றது தானா? அல்லது அதற்குத் தகுதி பெறாததாஎன்பதை அறிந்து, உண்மையில் எவன் வணங்கப்பட வேண்டுமோ அவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பது அதற்கான விளக்கமாகும்.

வணங்கப்படுவதற்குப் பொருத்தமான இலாஹ் ஒருவனே

إنما إله واحد. وإلهكم إله واحد. إنما الله إله واحد. وما من إله إلا إله واحد. قل إنما هو إله واحد. إنما إلهكم إله واحد.

இது போல இன்னும் எத்தனையோ வசனங்கள் அல்-குர்ஆனில் பாதிவாகியுள்ளது. அல்லாஹ் ஒருவனே இலாஹ் என்றே அவை அனைத்தின் அர்த்தங்களாகும்.

யார் முஷ்ரிக்?

المشرك الذي عبد مع الله إلها غيره

அல்லாஹ்வுடன் மற்றுமென்றையும் வணங்குபவன் முஷ்ரிக்காகும் என ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” (புகாரி)

ஹழ்ரத் ஆதம் அவர்களுடைய காலத்தில் ஹாபீலைக் கொலை செய்யும் காலம்வரை எல்லா ஜனங்களும் ஒரு மதத்தினராக இருந்தார்கள். அப்புறம் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் பிரளயமேற்பட்டதற்குப் பிறகு ஒரே சன்மார்க்கர்களாக அனைவரும் இருந்தார்கள். அப்புறம் அவர்கள் முஃமின் காபிர் என இரு வகையாகப் பிரிந்தனர். இனி உலகம் முடியும் தருவாயில் ஹழ்ரத் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் வந்த பிறகு ஒரே வர்க்கத்தினராவார்கள். இதற்கிடையிலுள்ள மத்திய காலத்தில் அவர்கள் பல சமூகத்தாராகவே இருந்து வருவார்கள்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...